மேலும் அறிய

தமிழக அரசு வெறும் வாய் அளவில் சமூக நீதி பேசிக்கொண்டிருக்காமல் சாதிய வன்முறைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி

காவல்துறை நினைத்தால் இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்திட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய தமிழகம் கட்சியின் பூத் கமிட்டி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் பொழுது, "தமிழ்நாடு அரசால் நடத்தப்படக்கூடிய மதுபான கடைகளால் நாளுக்கு நாள் மதுப்பழக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஏற்கனவே பலகட்ட போராட்டம் நடத்தியுள்ளோம்.  அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 15ஆம் தேதி பூரண மதுவிலக்கை அமல்படுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறப்பு மாநாடு நடத்தப்படும். அந்த மாநாட்டில் அனைத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் இதில் உடன்படக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அழைக்கவிருக்கிறோம்.

தென்தமிழகம் என்று சொன்னாலே தொடர்ந்து பல வருடங்களாக சாதிய மோதலுக்கு அடையாளமாக விளங்கியது. மீண்டும் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கக்கூடிய வகையில் 3 மாதங்களுக்கு முன்பு நாங்குநேரியில் சக பள்ளி மாணவர்கள் ஒரு பள்ளி மாணவர் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கழுகுமலையிலும் ஒரு மாணவர் தாக்கப்பட்டார். நேற்று முன்தினம்  நெல்லை மணி மூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் மீது அந்த பகுதியில் வந்த 6 பேரால் தாக்கப்பட்டது மட்டுமின்றி சிறுநீர் பாய்ச்சப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் கடுமையான கண்டனத்திற்குரியது.  வளர்ந்த தமிழ் சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது, மிருகத்தனமான இது போன்ற சம்பவங்கள் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். தென் மாவட்டங்களை சுற்றியே இதுபோன்று தொடர் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

காவல்துறையின் ஒட்டுமொத்தமான மெத்தனப் போக்கும், கையாலாகாத தனமும் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது, எனவே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வெறும் வாய் அளவில் சமூக நீதி பேசிக்கொண்டு, முற்போக்குத்தனத்தை பேசிக்கொண்டு இல்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையும், அரசும் இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளக் கூடாது. கிருஷ்ணசாமி தென் மாவட்டங்களில் நடைபெறும் தொடர் ஜாதிய வன்முறைகளை கண்டித்து நவம்பர் 18ஆம் தேதி கண்டன பேரணி  நெல்லையில் நடத்த இருக்கிறோம்.  நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் சம்பவம் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியது. சமூக நல்லிணக்கத்தை தென் மாவட்டங்களில் உண்டாக்க வேண்டும் என்று முயற்சி செய்து வரும் அதே வேளையில் எஸ்சி எஸ்டி வழக்கைக்கூட பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இது போன்ற சம்பவங்கள் அதுபோன்ற வழக்கை பயன்படுத்த வழிவகை செய்கிறது” எனத் தெரிவித்தார் . காவல்துறை நினைத்தால் இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்திட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
WhatsApp: வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
WhatsApp: வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Embed widget