மேலும் அறிய

கொரோனாவுக்கு பிறகு இருதய பாதிப்புகள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழக அரசு 'நடப்போம் நலம்பெறுவோம்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை 'சுகாதார நடைபயிற்சி' சாலையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு 'நடப்போம் நலம்பெறுவோம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் நீள சாலை 'சுகாதார நடைபயிற்சி சாலை'யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை சுகாதார நடைபயிற்சி சாலையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆகியோர் நடைபயிற்சி மேற்கொண்டு ஆய்வு செய்தனர்.


கொரோனாவுக்கு பிறகு இருதய பாதிப்புகள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தொடர்ந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, உலக இருதய தினம் கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு பிறகு இருதய பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதயம் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 8,713 துணை சுகாதார நிலையங்கள் என மொத்தமுள்ள 10,999 மருத்துவமனைகளிலும் இருதய நோய்க்கான 14 மாத்திரைகள் அடங்கிய 'லோடிங் டோசஸ்' கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கொரோனாவுக்கு பிறகு இருதய பாதிப்புகள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

தமிழக அரசு 'நடப்போம் நலம்பெறுவோம்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை 'சுகாதார நடைபயிற்சி' சாலையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு தெற்கு கடற்கரை சாலையை சுகாதார துறை தேர்வு செய்துள்ளது. இருபுறமும் கடல்நீர், உப்பளங்கள் மற்றும் மரங்கள் சூழ்ந்த இந்த சாலை நடைபயிற்சி ஏற்ற ரம்மியமான சாலையாகும்.

இதேபோன்று 38 மாவட்டங்களிலும் சுகாதார 'நடைபயிற்சி சாலை' தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலைகளின் இருபுறங்களிலும் மரங்களை நடுவது, ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியிலும் தூரத்தை குறிக்கும் அறிவிப்பு பலகை, நடந்தால் என்ன நன்மைகள் என்பதை குறிக்கும் விளக்க பலகைகள் வைக்கவும், 2 கிலோ மீட்டர் தொலைவு இடைவெளியில் நடைபயிற்சி செய்வோர் அமர்ந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இருக்கைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


கொரோனாவுக்கு பிறகு இருதய பாதிப்புகள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

38 மாவட்டங்களிலும் இந்த சுகாதார நடைபயிற்சி சாலைகளை அடுத்த மாதம் (அக்டோபர்) தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த சாலையில் மட்டும் மக்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பதற்காக இந்த சாலை அமைக்கப்படவில்லை. அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள ஒரு சாலையை தேர்வு செய்து 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு தினமும் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த சாலையின் நோக்கம். நடைபயிற்சி மூலம் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்றார்.


கொரோனாவுக்கு பிறகு இருதய பாதிப்புகள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் எஸ்.செல்வநாயகம், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சிவக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Udhayanidhi Stalin Angry | பதவி கேட்ட நிர்வாகிகள்.. டோஸ் விட்ட உதயநிதி! பரபரக்கும் அன்பகம்!Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
மாஸ்டர் பிளான்! படத்துல மட்டும் இல்ல, நிஜத்திலும் களத்தில் இறங்கும் விஜய்..!
மாஸ்டர் பிளான்! படத்துல மட்டும் இல்ல, நிஜத்திலும் களத்தில் இறங்கும் விஜய்..!
Crime: தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்? 
ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்? 
சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த  2 ரயில்கள்..!  அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!
சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த 2 ரயில்கள்..! அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!
Embed widget