மேலும் அறிய

மாநில பாடதிட்டத்தை விமர்சித்த ஆளுநர் ரவிக்கு இது தெரியுமா? தெரியாதா? - சபாநாயகர் அப்பாவு

தமிழ் படித்து வந்து உலகம் போற்றும், உலகமே வியக்கும்  விஞ்ஞானிகளாக பலர் இருக்கின்றனர். அதை தாங்க முடியாமல் சொன்னாரா - சபாநாயகர் அப்பாவு

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நெல்லை டவுண் மாநாகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வ.உ.சியின் மணிமண்டபத்தில் அள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், மேயர் ராமகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநில பாடதிட்டம் குறித்து ஆளுநர் விமர்சனம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆளுநர் ரவி அவர்கள் இப்படிப்பட்ட தர்கமான வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது என பல சந்தர்பங்களில் கூறியுள்ளேன். தமிழ்நாட்டின் பாடதிட்டம் குறித்து ஆளுநருக்கு முழுமையாக தெரியுமா தெரியாதா என்பது தெரியவில்லை, அல்லது சந்தேக கண்களுடன் பார்க்கிறாரா என தெரியவில்லை. இன்று விண்வெளியில் சந்தரயான் 3 தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டு உலகமே வியக்கும் வண்ணம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து தந்துள்ளது. அதில் வீரமுத்துவேல் என்பவர் இந்த திட்டத்தின் இயக்குனராக இருந்தவர். அவர் வீட்டின் முதல் பட்டதாரி, தமிழ் வழி கல்வி கற்றவர் அரசு பள்ளியில் பயின்றவர். இவர் மட்டும் அல்ல இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன், அதேபோல் இயக்குனராக  இருந்தவர் மயில்சாமி அண்ணாதுரை, தற்போது வனிதா, நிஜாஷா, நாராயணன், ராஜராஜன், சங்கரன்  இருக்கிறார்கள். சந்திரயான் 2 தரையிறங்கும் போது கீழே விழுந்துவிட்டது. அப்போது  சிவன் தான் தலைவராக இருந்தார், அது ஏன் விழுந்தது என ஆராய்ச்சி செய்ய இந்தியா முழுவதும் 11 விஞ்ஞானிகள் குழு அமைத்து அதன் தலைவராக இருந்தது கன்னியாகுமரியை சேர்ந்த நாராயணன்  தான். அவர் தலைமையில் ஆய்வு செய்து அதனை நிவர்த்தி செய்து சந்திரயான் 3  வெற்றி பெற செய்தது அவர் தான். இதில் பெருமை என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள அதிகமான விஞ்ஞானிகள் 90 சதவீதம் பேர் தமிழ்வழியில் பயின்றவர்கள், இவர்கள்தான் உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் உள்ளனர். இது ஆளுநருக்கு தெரியாதா  என்றார்.


மாநில பாடதிட்டத்தை விமர்சித்த ஆளுநர் ரவிக்கு இது தெரியுமா? தெரியாதா? -  சபாநாயகர் அப்பாவு

மேலும் தமிழக முதல்வர்  சாதனை படைத்த தபிழகத்தைச் சேர்ந்த 9 விஞ்ஞானிகளை கடந்த 6 மாத காலத்திற்கு முன்னாள் அழைத்து அவர்களை பாராட்டி 25 லட்சம் மற்றும் விருது வழங்கினார். அதோடு மட்டும் இல்லாமல் இந்த விஞ்ஞானிகளின் பெயரில் இளம் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கப்படும், தமிழ் படித்து வந்து உலகம் போற்றும் உலகமே வியக்கும்  விஞ்ஞானிகளாக இருக்கின்றனர்.   அதை தாங்க முடியாமல் சொன்னார்களா என்று தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார் என கூறினார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை  - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
Embed widget