மேலும் அறிய

தேங்காய் நார் எடுத்து செல்வதாக கூறி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - 58 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 3 ஆயிரம் டன் அரிசி பிடிபட்டுள்ளது. 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் - எஸ்.பி பாஸ்கரன் பேட்டி

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி அதிக அளவில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன, இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கரன் தலைமையில் நெல்லை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி,  மற்றும் போலீசார் வள்ளியூர் அருகே நேற்று முன் தினம் கொங்கன்தான் பாறை விலக்கு, நாங்குநேரி விலக்கு மற்றும் வள்ளியூரில் 2  இடங்களிலும் என மொத்தம் நான்கு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது, இதில் லாரிகளின் மேல் பாகத்தில் தேங்காய் நெட்டுகளை அடுக்கி வைத்து, அதன் மேல் தேங்காய் நார்களை லாரியில் சுற்றி கட்டி வைத்து உள்ளனர், 

தேங்காய் நார் எடுத்து செல்வதாக கூறி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - 58 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சந்தேகம் அடைந்த போலிசார் லாரியில் இருந்த சாக்குகளை பிரித்து சோதனையிட்டனர். அப்போது ஒரு லாரியில் 14 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் லாரி டிரைவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் ரேசன் அரிசி ஏற்றிவிட்ட தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டபிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அரிசி லாரி உரிமையாளர் ரிஜோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை கொங்கந்தான்பாறை அருகே நடந்த சோதனையில் லாரி மற்றும் ஆறுமுகநயினாருக்கு சொந்தமான குடோனில் சுமார் 11 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த வேலுமணி கைது செய்யப்பட்டார். அரிசியின் உரிமையாளர் ஆறுமுகநயினார் மற்றும் லாரி உரிமையாளர் நெய்யாற்றங்கரை வினுகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தேங்காய் நார் எடுத்து செல்வதாக கூறி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - 58 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மேலும் நடந்த தொடர் சோதனையில் ஒரு லாரியில் 18 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரியைச் சேர்ந்த செபஸ்டின்ராஜ் கைது செய்யப்பட்டார். லாரிகளை பறிமுதல் செய்த போலிசார் பெருமாள்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கொண்டு சென்றனர். மொத்தம் ஒருநாள் இரவில் நடந்த சோதனையில் சுமார் 58 டன் ரேஷன் அரிசி மற்றும் 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய ஆறுமுக நயினார், வினுகுமார், ஹரிஹரன் உள்ளிட்ட 8 பேரை தேடி வருகின்றனர்.


தேங்காய் நார் எடுத்து செல்வதாக கூறி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - 58 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 
இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல  கண்காணிப்பாளர்  பாஸ்கரன் கூறுகையில், ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 3 ஆயிரம் டன் அரிசி பிடிபட்டுள்ளது. 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் பயோ டீசல் 4 டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவியாக யார் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்கள் உடந்தையாக இருந்தால் அவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இந்த கடத்தலில் தொடர்புடைய ரிஜோ ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது தான் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget