மேலும் அறிய

தேங்காய் நார் எடுத்து செல்வதாக கூறி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - 58 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 3 ஆயிரம் டன் அரிசி பிடிபட்டுள்ளது. 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் - எஸ்.பி பாஸ்கரன் பேட்டி

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசி அதிக அளவில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன, இதனையடுத்து ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கரன் தலைமையில் நெல்லை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி,  மற்றும் போலீசார் வள்ளியூர் அருகே நேற்று முன் தினம் கொங்கன்தான் பாறை விலக்கு, நாங்குநேரி விலக்கு மற்றும் வள்ளியூரில் 2  இடங்களிலும் என மொத்தம் நான்கு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது, இதில் லாரிகளின் மேல் பாகத்தில் தேங்காய் நெட்டுகளை அடுக்கி வைத்து, அதன் மேல் தேங்காய் நார்களை லாரியில் சுற்றி கட்டி வைத்து உள்ளனர், 

தேங்காய் நார் எடுத்து செல்வதாக கூறி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - 58 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சந்தேகம் அடைந்த போலிசார் லாரியில் இருந்த சாக்குகளை பிரித்து சோதனையிட்டனர். அப்போது ஒரு லாரியில் 14 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. உடனே போலீசார் லாரி டிரைவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் ரேசன் அரிசி ஏற்றிவிட்ட தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டபிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அரிசி லாரி உரிமையாளர் ரிஜோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை கொங்கந்தான்பாறை அருகே நடந்த சோதனையில் லாரி மற்றும் ஆறுமுகநயினாருக்கு சொந்தமான குடோனில் சுமார் 11 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த வேலுமணி கைது செய்யப்பட்டார். அரிசியின் உரிமையாளர் ஆறுமுகநயினார் மற்றும் லாரி உரிமையாளர் நெய்யாற்றங்கரை வினுகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


தேங்காய் நார் எடுத்து செல்வதாக கூறி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - 58 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மேலும் நடந்த தொடர் சோதனையில் ஒரு லாரியில் 18 டன் ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரியைச் சேர்ந்த செபஸ்டின்ராஜ் கைது செய்யப்பட்டார். லாரிகளை பறிமுதல் செய்த போலிசார் பெருமாள்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கொண்டு சென்றனர். மொத்தம் ஒருநாள் இரவில் நடந்த சோதனையில் சுமார் 58 டன் ரேஷன் அரிசி மற்றும் 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய ஆறுமுக நயினார், வினுகுமார், ஹரிஹரன் உள்ளிட்ட 8 பேரை தேடி வருகின்றனர்.


தேங்காய் நார் எடுத்து செல்வதாக கூறி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் - 58 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 
இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல  கண்காணிப்பாளர்  பாஸ்கரன் கூறுகையில், ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மதுரை மண்டலத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 3 ஆயிரம் டன் அரிசி பிடிபட்டுள்ளது. 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் பயோ டீசல் 4 டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு உதவியாக யார் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரேஷன் கடை ஊழியர்கள் உடந்தையாக இருந்தால் அவர்களும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். இந்த கடத்தலில் தொடர்புடைய ரிஜோ ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது தான் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.