மேலும் அறிய

கட்டணம் ஜாஸ்தி, கம்மி பன்னினா நல்லா இருக்கும் - குருசடைதீவு படகு சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்!

ராமேஸ்வரம் அருகே, அதிக கட்டணத்தால் குருசடைதீவு சுற்றுலா படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டாமல் சுற்றுலா பயணிகள் கட்டணத்தை குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குருசடை தீவு வெளியிட ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும்., இந்த தீவு தனித்தன்மையான பவளப்பாறைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும். மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தீவு, மண்டபம் பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. மன்னார் வளைகுடாவில் வாழ்க்கையை அனுபவித்திடும் டால்பின்கள் மற்றும் கடற்பசுக்களை இந்த தீவில் காண முடியும். இந்த கடற்பகுதியின் சுற்றுப்புறங்களிலிருந்து பெரிதும் தனித்தன்மையாக மாறுபட்டுள்ள பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை வாழும் கடற்பாசிகளை இந்த தீவு பெற்றுள்ளது.


கட்டணம் ஜாஸ்தி, கம்மி பன்னினா நல்லா இருக்கும் - குருசடைதீவு படகு சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்!

இந்த தீவின் மற்றுமொரு கடல் சூழலிற்கான சொத்து இங்கு காணப்படும் கடற்பஞ்சுகளாகும். இந்த கடற்பஞ்சு உயிரினத்திற்கு அருகில் வேறு ஏதாவது உயிரினம் வந்தாலோ அல்லது யாராவது இதற்கு ஆபத்து விளைவிக்க நினைத்தாலோ அமீபாவைப் போன்று இது உருமாறி விடும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமான இந்த தீவை சுற்றிப்பார்க்க படகு போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆனால் அதற்கு கட்டணமாக  ரூபாய் 400 நிர்ணயிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது


கட்டணம் ஜாஸ்தி, கம்மி பன்னினா நல்லா இருக்கும் - குருசடைதீவு படகு சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்!

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் டால்பின், கடல் பசு, ஆமை, கடல் குதிரை, பவளப்பாறைகள் உள்ளிட்ட 3,600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மண்டபம் சரகத்திற்கு உட்பட்ட பாம்பன் குந்துகால் அருகே உள்ள கடல் பகுதியில் குருசடை தீவு மற்றும் சிங்கலிதீவும் உள்ளன. இதில் குருசடை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் பல வண்ணங்களில் கடலுக்குள் அதிக அளவில் பவளப்பாறைகள் உள்ளதுடன் டால்பின், ஆமை உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்களும் அதிகமாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.


கட்டணம் ஜாஸ்தி, கம்மி பன்னினா நல்லா இருக்கும் - குருசடைதீவு படகு சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்!

சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் வனத்துறை மூலம் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடைதீவு வரையிலும் கடந்த 5  நாட்களுக்கு முன்பு சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக குந்துகால் கடற்கரையில் உள்ள விவேகானந்தர் மணிமண்டபம் கடற்கரை பகுதியில் மரத்தாலான படகு நிறுத்தும் தளம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு 12 பேர் அமர்ந்து பயணம் செய்ய பைபர் படகு ஒன்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


கட்டணம் ஜாஸ்தி, கம்மி பன்னினா நல்லா இருக்கும் - குருசடைதீவு படகு சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்!

படகில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு ரூ.400 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு நபருக்கு அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரியில் ஆர்வம் காட்டாமல் திரும்பிச் செல்கின்றனர்.மேலும் முக்கிய இடங்களில் படகு போக்குவரத்து குறித்த தகவல் பலகை வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் குருசடை தீவு வரையிலும் தொடங்கப்பட்டுள்ள இந்த படகு போக்குவரத்தில் பயணிகளின் கட்டணத்தை குறைத்து பல்வேறு இடங்களில் இதுகுறித்த தகவல் பலகைகளை வைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டணம் ஜாஸ்தி, கம்மி பன்னினா நல்லா இருக்கும் - குருசடைதீவு படகு சவாரியில் ஆர்வம் காட்டாத சுற்றுலா பயணிகள்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் என்பது மிகவும் ஒரு அரிதான விஷயமாகவே இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள தீவுகளில் ஒன்றான குருசடை தீவை சுற்றுலா தலமாக மாற்றி உள்ளது உள்ளூர் பொதுமக்களிடமும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளிடையேயும் வரவேற்பை பெற்றிருந்தாலும் அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் என்பது அதிகமானதாகவே பார்க்கப்படுகிறது. எனவே தமிழக அரசும் வனத்துறையும் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என உள்ளூர் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | MaduraiTVK Member Audio | RN Ravi Praised Tamilnadu | ”தமிழ்நாடு தான் BESTபெண்கள் பாதுகாப்பா இருக்காங்க” RN ரவி புகழாரம் | DMKCongress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
இதுவரை 600 பேர்! தமிழ்நாட்டில் புதிதாக பரவும் பாக்டீரியா தொற்று – எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி!
PM Modi: மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
மாணவி பதிலால் பிரதமர் ஷாக்.! எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரம் அளிக்கிறேன்...
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு  - திருமாவை சாடிய அன்புமணி
அத்துமீறு , அடங்க மறு , திருப்பி அடி என்பது சட்டம் - ஒழுங்கு சீர்கேடு - திருமாவை சாடிய அன்புமணி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
பணியிடத்தில் இதுவும் பாலியல் தொல்லை தான்… - மேனேஜர் செய்த விஷயத்தால் காட்டமான நீதிபதி
Seeman Photo Troll: சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
சீமானை போட்டு பொளக்கும் நெட்டிசன்கள்... தீராத புகைப்பட சர்ச்சை...
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
ஹேப்பி நியூஸ்! ‘புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளது’ - டங்ஸ்டன் ஏலம் ரத்து – மத்திய அரசு அதிரடி உத்தரவு
"நாட்டை சீர்குலைக்க சதி.. கவனமா இருங்க" பிரதமர் மோடி வார்னிங்!
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
ஸ்டாலின் பகிர்ந்த தமிழ்நாட்டின் சிறப்பு – புகழ்ந்து தள்ளிய ராகுல்காந்தி – என்ன விஷயம்?
Embed widget