மேலும் அறிய

Love Marriage: இனி ஓடிப்போய் காதல் திருமணம் செய்ய முடியாது.. வருகிறது புது சட்டம்!

காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் என்ற அவசர சட்டத்தை விரைவில் குஜராத் மாநில அரசு கொண்டு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநில அரசு காதல் திருமணம் செய்ய கண்டிப்பாக பெற்றோர்களின் ஒப்புதல் தேவை என்ற சட்டத்தை விரைவில் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருமணமும்.. அதிகரிக்கும் பிரச்னையும்

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிக முக்கிய அங்கமாக உள்ளது. காதல், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது என இருவகைகளில் திருமணமானது நடைபெறுகிறது. அதேசமயம் சாதி, மதம், பொருளாதார பின்னணி போன்ற பல காரணங்களால் காதல் திருமணமானது பெரும்பாலான வீடுகளில் நிராகரிக்கப்படுகிறது. ஆனால் காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் கடைசி வரை பெற்றோர்களின் சம்மதத்திற்காக போராடுகின்றனர். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக் கொள்கின்றனர். 

இந்திய அரசு சட்டமும் திருமணத்திற்கான வயதை ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனியாக நிர்ணயித்துள்ளது. இப்படியான நிலையில் வீட்டை விட்டு வெளியேறி நடைபெறும் காதல் திருமண வழக்குகள், மோசடியாக நடைபெறும் நிகழ்வுகள், பெற்றோர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் என பல விஷயங்களை மேற்கொள் காட்டி குஜராத்தில் அவசர சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறி நடைபெறும் காதல் திருமணங்களில் பெரும்பாலானவை பிரச்னையையும் சந்திக்கின்றன. விவாகரத்து தொடங்கி பெற்றோர் ஆதரவு இல்லாமல் போவதால் உயிரை மாய்த்துக் கொள்வது வரை விபரீத முடிவுகளுக்கும் செல்வது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

விரைவில் அவசர சட்டம்

இந்த நிலையில் காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் என்ற அவசர சட்டத்தை விரைவில் குஜராத் மாநில அரசு கொண்டு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2023ம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனவும், இந்த சட்டத்தைக் கொண்டு வந்த முதல் மாநிலமாக குஜராத் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இந்த அவசர சட்டத்துக்கு அந்த மாநில காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் ஒரு மனதாக ஆதரவைத் தெரிவித்துள்ளது முரண்பாடாகவும், சுவாரஸ்யமானதாகவும் மாறியுள்ளது. 

தங்களுக்குத் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொள்ளும்போது பெற்றோர்கள் கைவிடப்பட்டவர்களாக உணர்கிறார். அதனை தவிர்க்க ஒரு சட்ட கட்டமைப்பு தேவை என பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளால் அவர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பங்களின் சமூக நிலையும் பாதிக்கப்படுகிறது. 

ஒருவேளை வீட்டை விட்டு வெளியேற திருமணம் செய்ய நினைத்து காவல்துறையை அணுகும்பட்சத்தில் மணப்பெண்ணின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட முகவரிக்கு முறையான அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். பின் பெற்றோர் பதிலளிக்க அல்லது ஆட்சேபனைகள் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNPSC, SSC, RRB தேர்வு.! தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Embed widget