மேலும் அறிய

பாபநாசம்: மீண்டும் மீண்டும் கூண்டில் சிக்காமல் போக்கு காட்டும் கரடிகள்! அச்சத்தில் கிராம மக்கள்!

பாபநாசம் அருகேயுள்ள அனவன்குடியிருப்பு, வி.கே.புரம், கோட்டைவிளைபட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் குட்டியுடனும், தனியாகவும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இரவில் சுற்றித் திரிகின்றன

இரவில் கோவிலில் உலா வரும் கரடி:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இதில் யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி மலை அடிவாரத்திலுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, ஆடு,நாய் போன்றவற்றை கடித்து வருகின்றது. அதன்படி பாபநாசம் அருகேயுள்ள அகஸ்தியர்புரம், அனவன்குடியிருப்பு, வி.கே.புரம், சிவந்திபுரம், கோட்டைவிளைபட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் குட்டிகளுடனும், தனியாகவும் இரவு நேரங்களில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்  அடி‌க்கடி சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில்  நேற்று இரவு கோட்டைவிளை பட்டியில் உள்ள சுடலைமாடன் கோவில் வளாகத்தில் இரவு ஆள் நடமாட்டம் உள்ள நேரத்தில் ஒற்றை கரடி ஒன்று  சுற்றித்திரிந்தது. இதனை அப்பகுதியினர் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இதனால் அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

சிறுத்தையை தொடர்ந்து கரடி அச்சம்:  

குறிப்பாக அனவன்குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் கரடி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அங்குள்ள பாறைகளுக்கு அருகில் கோயிலில் கரடி உலா வந்துள்ளது. இதனை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் அதனை வீடியோ எடுத்து உள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஏற்கனவே அப்பகுதியில் இரண்டு சிறுத்தைகள் அடுத்தடுத்து கூண்டில் சிக்கிய நிலையில் மேலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அம்மக்கள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில்  கரடி நடமாட்டம் மேலும் அவர்களை அச்சமடைய செய்தது. 

சர்வ சாதாரணமாக சுற்றித்திரியும் கரடிகள்:

அதன்பின்னர் அனவன்குடியிருப்பிற்கு அருகிலேயே இருக்கும் டாணா பகுதியில் கடந்த கடந்த வாரம்  காளிபார்விளை தெருவில் இரவில் கரடி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் கரடி அப்பகுதியில் செல்லும் போது அங்கு தெருக்களில் இருந்த மக்கள் கரடியை பார்த்து கரடி கரடி என்று கூறி உள்ளே செல்வதும், ஒரு  நபர் வீட்டிற்குள் இருந்தே சத்தமிட்டு அதனை விரட்டுவதும் அந்த காட்சியில் பதிவாகியது..  இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, இரவு நேரங்களில் வெளியில் நடமாடவே மிகுந்த பயமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக பாபநாசம் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே கிராமங்களில் கரடிகள் தெருக்களில் நாய்கள் செல்வது போது சர்வ சாதாரணமாக செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படும் முன் வனத்துறையினர் கரடி நடமாட்டம் உள்ள இடங்களை கண்காணித்து அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த காட்டிற்குள் விட வேண்டுமென சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு நாம் செய்தியாக வெளியிட்ட  நிலையில் வனத்துறையினர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

கூண்டில் சிக்காமல் போக்கு காட்டும் கரடி:

குறிப்பாக கரடிகளை பிடிக்க வனத்துறையினர் அனவன் குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் பகுதிகளில் கூண்டு வைத்து அதனை கண்காணித்து வருகின்றனர். ஆனால் கூண்டில் சிக்காமல் கரடி போக்கு காட்டி வருகிறது. இதனால் வனத்துறையினர் கரடியை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.  தொடர்ந்து கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
India China Vs US: இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
இந்தியா வரும் சீன வெளியுறவு அமைச்சர்; மாறும் ரூட் - அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்
Rahul Gandhi Vs EC: “இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன்“; தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி - வீடியோ பதிவு
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Embed widget