மேலும் அறிய

நெல்லையில் ரூ. 14 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட வஉசி மைதானத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த அவலம்

மைதானம் சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலே நடைபெற்ற இந்த பெரும் விபத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் சுமார் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்கள் சீரமைத்தல் வணிக வளாகங்கள் விளையாட்டு அரங்குகள் சீரமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு சமீபத்தில் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இங்கு மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுகள் நடத்தப்பட்டு வருகிறது. அரங்கத்தை சுற்றி இருபுறமும் இருக்கைகளுடன் கூடிய கேலரிகள் அமைக்கப்பட்டு நவீன மேற்கூரைகளும் அமைக்கப்பட்டது.


நெல்லையில் ரூ. 14 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட வஉசி மைதானத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த அவலம்

இந்த நிலையில் இன்று பிற்பகல் நெல்லை மாநகரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக பாளையங்கோட்டை பகுதியில் காற்று மிக பலமாக வீசிய நிலையில் வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கேலரியின் மேற்கூரை ஒன்று காற்றில் பெயர்ந்து அடியோடு சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கூரை இலகுவாக அமைக்கப்பட்ட நிலையில் காற்றின் வேகத்தை தாக்குபிடிக்க முடியாமல் மேற்கூரை அங்கும், இங்கும் ஆடி கீழே மேற்கூரையை தாங்கி பிடித்து கொண்டிருந்த  சிமெண்ட் கலவை உடைந்து மேற்கூரை தலைகீழாக சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வழக்கமாக காலை மற்றும் மாலை மக்கள் இங்கு நடைபயிற்சி மேற்கொள்வார்கள். அதே போல் இளைஞர்கள், பெண்கள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இன்று பிற்பகல் நேரம் என்பதாலும் மழை பெய்த காரணத்தாலும் மைதானத்தில் ஆள் நடமாட்டம் இல்லை. மைதானம் சீரமைக்கப்பட்ட சில மாதங்களிலே நடைபெற்ற இந்த பெரும் விபத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.



நெல்லையில் ரூ. 14 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட வஉசி மைதானத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த அவலம்

ஏற்கனவே சரியான திட்டமிடல் இல்லாமல் மைதானம் மிக குறுகலாக அமைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டு வீரர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இது போன்று சூழ்நிலையில் அரசின் அலட்சியத்தால் 14 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்ட மைதானத்தின் மேற்கூரை சாதாரண மழைக்கே இடிந்து விழுந்த சம்பவம் விளையாட்டு வீரர்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் தகவல் அறிந்து மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி மைதானத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் விபத்து குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மழை மற்றும் வேகமான காற்று காரணமாக மேற்கூரை இடிந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.