மேலும் அறிய

தாமிரபரணியாறு - நம்பியாறு - கருமேனியாறு நதிநீர் இணைப்புத்திட்ட பணிகள் மார்ச் 2023ல் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் துரைமுருகன்

"குவாரிகாரர்கள் என்னை பார்க்கவில்லை. அதற்கு முன் நீதிமன்றத்தை நாடினார்கள். கல்குவாரிகளில் தவறு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நிலையை எண்ணி அவர்களை மன்னிப்பதற்கு தயாராக உள்ளோம்" - துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டல நீர்வளத்துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் தென் மாவட்டங்களில் நடந்து வரும் நீர்வளத்துறை தொடர்பான பணிகளின் நிலை, கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளின் தற்போதைய நிலை, மற்றும் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணம் அதற்கான தீர்வு உள்ளிட்டவையில் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வறட்சி மிகுந்த பகுதிகளை வளமாக்கும் வகையில் புதிய திட்டங்களை தயார் செய்து அதற்கான கருத்துருக்களை உடனடியாக சமர்ப்பிக்கவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும் பிற துறைகளால்  செய்யப்படும் காலதாமதத்தால் நிறுத்தப்பட்டுள்ள பணிகளை உடனடியாக மேற்கொள்ள பிற துறை சார்ந்த அதிகாரிகளையும் அறிவுறுத்தியதுடன் அதற்கான காரணங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.


தாமிரபரணியாறு - நம்பியாறு - கருமேனியாறு நதிநீர் இணைப்புத்திட்ட பணிகள்  மார்ச் 2023ல் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் துரைமுருகன்

இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நதிநீர் இணைப்புத்  திட்டப் பணிகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் பச்சையாற்றின்  குறுக்கே தமிழாக்குறிச்சி என்ற இடத்தில்  9 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும்   தடுப்பு அணை, பாலம் ஆகியவற்றை  பார்வையிட்டார்.  தொடர்ந்து நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளை  பொன்னாக்குடி பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும் பொழுது,


தாமிரபரணியாறு - நம்பியாறு - கருமேனியாறு நதிநீர் இணைப்புத்திட்ட பணிகள்  மார்ச் 2023ல் பயன்பாட்டிற்கு வரும் - அமைச்சர் துரைமுருகன்

கடந்த 10 வருடம் எந்த அதிகாரிகளும் வேலை செய்யவில்லை. அனைவருக்கும் பல வேலைகள் மறந்துவிட்டது. அமைச்சரவை பதவியை ஏற்ற பின்னர் அனைவருக்கும் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது  நதிநீர் இணைப்புத் திட்டபணி. நான் ஆரம்பித்ததை நானே திறக்கவேண்டும் என விட்டு விட்டார்கள் போல. அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்பு திட்டம் முதல் இரண்டு பகுதிகள் 100% முடிந்துள்ளது. 3ம் பகுதி 99% பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. 4ம் பகுதி 58% பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் முழுமையாக  மார்ச் 2023ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். தொடர்ந்து நெல்லையில் நடந்த கல்குவாரி விபத்து குறித்து பேசிய அவர், அந்த சம்பவம் அனுதாபத்திற்குரியது, மிகவும் வருத்தத்திற்குரியது. ஆனால் அதன் விளைவு அனைத்து குவாரிகளும் மூடப்பட்டது. ஒரு குவாரி மூடுவதற்கு அனைத்து குவாரியையும் மூடியது தவறு. ஏனென்றால் ஒரு குவாரிக்கு பின்னர் ஆயிரம் தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். சிறிய அளவிலான அபராதம் விதித்து கல்குவாரிகளை திறப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குவாரிகாரர்கள் என்னை பார்க்கவில்லை. அதற்கு முன் நீதிமன்றத்தை நாடினார்கள். கல்குவாரிகளில் தவறு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நிலையை எண்ணி அவர்களை மன்னிப்பதற்கு தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget