மேலும் அறிய

தமிழில் குடமுழுக்கு: கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தால் பாதியில் நிறுத்தம்

இந்து அறநிலையத்துறை கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நெல்லையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் இந்து அமைப்பினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணைப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சுகி சிவம் உள்ளிட்டோர் கருத்துகளை கேட்க மேடையில் அமர்ந்திருந்தனர். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், இந்து அமைப்பினர் மற்றும் சிவனடியார்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்வதற்காக வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியவுடன் சிலர் மேடை அருகில் சென்று இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கேட்பு கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் இந்து கடவுள் படம் இடம்பெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினரும் கடவுள் படம் வைக்க கோரி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தமிழ் தேசிய தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு இந்து அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினரிடைய கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் அளவுக்கு அனைவரும் மேடை அருகில் நின்று கூச்சல் போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.


தமிழில் குடமுழுக்கு: கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தால் பாதியில் நிறுத்தம்

இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் போலீசார் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் இந்து அமைப்பினர் மேடை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேடையில் இருந்த கமிட்டி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கடவுள் படம் மாட்டப்பட்டது. இதற்கிடையில் கூச்சல் குழப்பம் காரணமாக கருத்து கேட்பு கூட்டத்தை பாதியில் முடித்துக் கொள்வதாகவும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை தபால் மூலமாக இந்து அறநிலை துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அறிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் ஒவ்வொருவரையும் சமாதனப்படுத்தி மண்டபத்தை விட்டு அனுப்பி வைத்தனர். அனைவரும் தங்களது கருத்துக்களை அதற்கு உரிய படிவத்தில் எழுதி அதனை குழுவினரிடம் ஒப்படைத்தனர்.


தமிழில் குடமுழுக்கு: கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தால் பாதியில் நிறுத்தம்

கூட்டத்தின் நிறைவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவது, அதற்கான நெறிமுறைகளை வகுப்பது குறித்து  முதன் முதலாக நெல்லை தூத்துக்குடி மண்டலத்தில் கருத்து கேட்கப்பட்டுள்ளது .  கலந்து கொண்டவர்களிடம் எழுத்து வடிவில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது ,தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு இதுகுறித்த அறிக்கை அரசு மூலமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்  என தெரிவித்தார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget