மேலும் அறிய

தமிழில் குடமுழுக்கு: கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தால் பாதியில் நிறுத்தம்

இந்து அறநிலையத்துறை கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக நெல்லையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் இந்து அமைப்பினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஆணைப்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சுகி சிவம் உள்ளிட்டோர் கருத்துகளை கேட்க மேடையில் அமர்ந்திருந்தனர். இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், இந்து அமைப்பினர் மற்றும் சிவனடியார்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்வதற்காக வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியவுடன் சிலர் மேடை அருகில் சென்று இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கேட்பு கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனரில் இந்து கடவுள் படம் இடம்பெறவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினரும் கடவுள் படம் வைக்க கோரி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தமிழ் தேசிய தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு இந்து அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினரிடைய கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் அளவுக்கு அனைவரும் மேடை அருகில் நின்று கூச்சல் போட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.


தமிழில் குடமுழுக்கு: கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தால் பாதியில் நிறுத்தம்

இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையில் போலீசார் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் இந்து அமைப்பினர் மேடை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேடையில் இருந்த கமிட்டி உறுப்பினர்கள் கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கடவுள் படம் மாட்டப்பட்டது. இதற்கிடையில் கூச்சல் குழப்பம் காரணமாக கருத்து கேட்பு கூட்டத்தை பாதியில் முடித்துக் கொள்வதாகவும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை தபால் மூலமாக இந்து அறநிலை துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அறிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் ஒவ்வொருவரையும் சமாதனப்படுத்தி மண்டபத்தை விட்டு அனுப்பி வைத்தனர். அனைவரும் தங்களது கருத்துக்களை அதற்கு உரிய படிவத்தில் எழுதி அதனை குழுவினரிடம் ஒப்படைத்தனர்.


தமிழில் குடமுழுக்கு: கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதத்தால் பாதியில் நிறுத்தம்

கூட்டத்தின் நிறைவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவது, அதற்கான நெறிமுறைகளை வகுப்பது குறித்து  முதன் முதலாக நெல்லை தூத்துக்குடி மண்டலத்தில் கருத்து கேட்கப்பட்டுள்ளது .  கலந்து கொண்டவர்களிடம் எழுத்து வடிவில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது ,தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு இதுகுறித்த அறிக்கை அரசு மூலமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்  என தெரிவித்தார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 9 மணி நிலவரம் - 10.28% ஆக பதிவானது
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
TN Rain Alert: அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
அடுத்த 5 நாட்கள் கவனமாக இருங்க.. தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா?
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
தஞ்சாவூர் மாநகராட்சி : 3-ஆம் சனிக்கிழமை தொற்றாநோய்கள் சிறப்பு மருத்துவமுகாம்
Iranian President Raisi: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. ஈரான் ஊடகங்கள் தகவல்
Embed widget