மேலும் அறிய

கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை அதிமுகவினர் திறந்து வைத்தார்கள் - கே.என்.நேரு

முதல்-அமைச்சர் நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கி தந்து உள்ளார். இதில் 16 ஆயிரம் கோடியை அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிக்கு பிரித்து கொண்டு அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா பஸ் நிலையம், அம்பேத்கார் நகரில் ரூ.29 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.


கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை  அதிமுகவினர் திறந்து வைத்தார்கள் - கே.என்.நேரு

விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பஸ் நிலையத்தில் சிலர் அவர்களின் கட்சி தலைவரின் படத்தை ஒட்டுகிறார்கள். எதிர்க்கட்சியினர் இந்த திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றை அ.தி.மு.க.வினர் திறந்து வைத்தார்கள். அப்போது நாங்கள்தான் திறப்போம் என்று செல்லவில்லை. எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அவர்கள்தான் திறந்து வைப்பார்கள். 8 ஆண்டுகளாக அ.தி.மு.க.வினர் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உங்களால் முடிக்க முடியவில்லை.


கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை  அதிமுகவினர் திறந்து வைத்தார்கள் - கே.என்.நேரு

ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் 80 சதவீதம் பணிகளை முடித்து உள்ளோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி தருகிறார். அதனை நிதியமைச்சர் பக்குவமாக பிரித்து கொடுக்கிறார். மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓயமாட்டார். அதே போன்று அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் அனதை்தும் இந்த மாவட்டத்துக்கு பொருந்தி இருக்கிறது.


கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை  அதிமுகவினர் திறந்து வைத்தார்கள் - கே.என்.நேரு

முதல்-அமைச்சர் நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கி தந்து உள்ளார். இதில் 16 ஆயிரம் கோடியை அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிக்கு பிரித்து கொண்டு அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு 5 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். அனைத்து சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் சாலை வசதி, சாலை, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், சுகாதார வசதி சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ஏனென்றால், நகர்ப்புறங்களில் 60 சதவீதம் மக்கள் உள்ளனர். 10 சதவீதம் மக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் 38 இடங்களில் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 100 இடங்களுக்கு மேல் மார்க்கெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து நகர்ப்புறங்களிலும் குடிநீர் வழங்குவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. அதனை முதல்-அமைச்சர் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். நீங்கள் சிறப்பாக செயல்படுங்கள். உங்கள் செயல்பாடு காரணமாக மீண்டும் தி.மு.க. ஆட்சி மலரும். இதனால் மீண்டும், மீண்டும் நம் முதல்வர் ஆட்சியில் இருப்பார்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget