மேலும் அறிய

கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை அதிமுகவினர் திறந்து வைத்தார்கள் - கே.என்.நேரு

முதல்-அமைச்சர் நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கி தந்து உள்ளார். இதில் 16 ஆயிரம் கோடியை அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிக்கு பிரித்து கொண்டு அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.57 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு உள்ள அண்ணா பஸ் நிலையம், அம்பேத்கார் நகரில் ரூ.29 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள அறிவியல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட ரூ.200 கோடி மதிப்பிலான கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திட்டங்களை தொடங்கி வைத்தனர்.


கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை  அதிமுகவினர் திறந்து வைத்தார்கள் - கே.என்.நேரு

விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பஸ் நிலையத்தில் சிலர் அவர்களின் கட்சி தலைவரின் படத்தை ஒட்டுகிறார்கள். எதிர்க்கட்சியினர் இந்த திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையம் ஆகியவற்றை அ.தி.மு.க.வினர் திறந்து வைத்தார்கள். அப்போது நாங்கள்தான் திறப்போம் என்று செல்லவில்லை. எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அவர்கள்தான் திறந்து வைப்பார்கள். 8 ஆண்டுகளாக அ.தி.மு.க.வினர் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உங்களால் முடிக்க முடியவில்லை.


கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை  அதிமுகவினர் திறந்து வைத்தார்கள் - கே.என்.நேரு

ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் 80 சதவீதம் பணிகளை முடித்து உள்ளோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிதி ஒதுக்கி தருகிறார். அதனை நிதியமைச்சர் பக்குவமாக பிரித்து கொடுக்கிறார். மேலும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் எடுத்த காரியத்தை முடிக்காமல் ஓயமாட்டார். அதே போன்று அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம் அனதை்தும் இந்த மாவட்டத்துக்கு பொருந்தி இருக்கிறது.


கலைஞர் கட்டிய ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஆசியாவிலேயே பெரிய கோயம்பேடு பஸ் நிலையத்தை  அதிமுகவினர் திறந்து வைத்தார்கள் - கே.என்.நேரு

முதல்-அமைச்சர் நகராட்சி நிர்வாக துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கி தந்து உள்ளார். இதில் 16 ஆயிரம் கோடியை அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிக்கு பிரித்து கொண்டு அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு 5 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளார். அனைத்து சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர்ப்புறங்களில் சாலை வசதி, சாலை, கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், சுகாதார வசதி சிறப்பாக இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். ஏனென்றால், நகர்ப்புறங்களில் 60 சதவீதம் மக்கள் உள்ளனர். 10 சதவீதம் மக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் 38 இடங்களில் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 100 இடங்களுக்கு மேல் மார்க்கெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து நகர்ப்புறங்களிலும் குடிநீர் வழங்குவதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளன. அதனை முதல்-அமைச்சர் அனுமதி பெற்று நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். நீங்கள் சிறப்பாக செயல்படுங்கள். உங்கள் செயல்பாடு காரணமாக மீண்டும் தி.மு.க. ஆட்சி மலரும். இதனால் மீண்டும், மீண்டும் நம் முதல்வர் ஆட்சியில் இருப்பார்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
Embed widget