மேலும் அறிய

10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சொத்துகுவிப்பு வழக்கு;அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விடுவிப்பு

வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டவர்கள்  மீது நடைபெற்று வந்த சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அதிமுக அரசு 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கைத்தறி  உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்த போது கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 94.88 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி இவர்களுக்கு உறுதுணையாக இருந்ததாக தொழில் அதிபர் சண்முக மூர்த்தி உள்ளிட்டோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு திமுக சார்பில் அமைச்சர் உள்ளிட்டவர்களை விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஒரு சில குழப்பங்கள் இருப்பதாகவும், ஆகையால் மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் வழக்கில் இருந்து அமைச்சர் உள்ளிட்டவரை விடுவிக்க சுமார் 26 ஆவணங்கள் 2022 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மொத்தமுள்ள 26 ஆவணங்களில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான திரையரங்கம் விற்பனை செய்தது உள்ளிட்ட 10 ஆவணங்கள் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த ஆவணங்களின் அடிப்படையில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்க்கவில்லை என்பது தெரிய வந்ததையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் இவ்வழக்கை முடித்து வைக்க மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான விசாரணை கடந்த ஒரு வருடமாக நடைபெற்ற நிலையில் இன்று தற்போதைய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சருமான கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் அவரது மனைவி ஆதிலட்சுமி மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்ததாக தொழில் அதிபர் சண்முக மூர்த்தி உள்ளிட்ட மூவரையும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி திலகம் உத்தரவிட்டார். கடந்த 10 வருடமாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதே போல 2006-11 கால கட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வழக்கில் இருந்தும் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Embed widget