மேலும் அறிய

மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

மாஞ்சோலை படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சியினர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேல், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி கூலி உயர்வு கேட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியாக வந்தனர்.
மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஊதிய உயர்வு தொடர்பாக மனு கொடுப்பதாகத் திட்டம். ஆனால், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கிய போது பேரணியாக சென்ற மக்களின் பிரதிநிதிகளை உள்ளே விட மறுத்தது காவல்துறை. இதன் விளைவாக, வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் காவல்துறை தடியடி நடத்தத் தொடங்கியது.
மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

போலீசாரின் தடியடிக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிரிழந்த 17 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தப்பக்கம் ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர். அந்தப்பக்கம் தாமிரபரணி ஆறு.இந்த அடிக்கு பயந்து தப்பிக்க முயற்சித்த பலருக்கும் ஒரே வழியாக இருந்தது தாமிரபரணி ஆறுதான். வேறு வழியில்லை. எப்படியேனும், ஆற்றை கடந்துவிட்டால், தடியடியிலிருந்து தப்பி உயிர்பிழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் பேரணி கும்பல். கூட்டமாக ஆற்றில் விழுந்து அந்தப்பக்கம் செல்ல முயற்சித்த அப்பாவிகளில் 17 பேர் அன்று ஆற்றில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

இவர்களின் நினைவு தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 22வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்த 23 அமைப்புகள் அனுமதி கேட்டுள்ளன. இவர்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

எந்த அமைப்பினரும் ஊர்வலம், பேரணியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்பிற்கு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட சிலர் மட்டுமே ஆற்றுப் பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என காவல்துறை தெரிவித்தது.

இதனையடுத்து கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர் சிலை அருகில் காவல்துறையினர் தற்காலிக சோதனை சாவடி அமைத்து அஞ்சலி செலுத்த வரும் நபர்களின் அமைப்பு , பெயர் விபரங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு சிலர்  மட்டும் ஆற்றிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 
மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

இதனையடுத்து இந்து மக்கள் கட்சி , கம்யூனிஸ்ட் கட்சிகள் , காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் , பல்வேறு அமைப்புகள் என தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் . இதனையொட்டி ஆற்று பகுதியில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

மேலும் ஆற்று பகுதியில் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழ்ந்துவிடாத வண்ணம் தீயணைப்புத்துறையின் சார்பில் பைபர் படகுடன் ஆற்றுப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் 

தலைப்பு செய்திகள்

பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
பானைகள் முதல் பகடைக்காய் வரை... சங்ககால வாழ்வின் மர்மங்கள் விலகும் மலையடிப்பட்டி அகழாய்வு !
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget