மேலும் அறிய

மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

மாஞ்சோலை படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சியினர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணைக்கு மேல், மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி கூலி உயர்வு கேட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேரணியாக வந்தனர்.
மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஊதிய உயர்வு தொடர்பாக மனு கொடுப்பதாகத் திட்டம். ஆனால், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கிய போது பேரணியாக சென்ற மக்களின் பிரதிநிதிகளை உள்ளே விட மறுத்தது காவல்துறை. இதன் விளைவாக, வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் காவல்துறை தடியடி நடத்தத் தொடங்கியது.
மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

போலீசாரின் தடியடிக்கு பயந்து தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிரிழந்த 17 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தாமிரபரணி ஆற்றில் பல்வேறு அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தப்பக்கம் ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர். அந்தப்பக்கம் தாமிரபரணி ஆறு.இந்த அடிக்கு பயந்து தப்பிக்க முயற்சித்த பலருக்கும் ஒரே வழியாக இருந்தது தாமிரபரணி ஆறுதான். வேறு வழியில்லை. எப்படியேனும், ஆற்றை கடந்துவிட்டால், தடியடியிலிருந்து தப்பி உயிர்பிழைக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் பேரணி கும்பல். கூட்டமாக ஆற்றில் விழுந்து அந்தப்பக்கம் செல்ல முயற்சித்த அப்பாவிகளில் 17 பேர் அன்று ஆற்றில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

இவர்களின் நினைவு தினம் ஆண்டு தோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 22வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்த 23 அமைப்புகள் அனுமதி கேட்டுள்ளன. இவர்களுக்கு மாநகர காவல்துறை சார்பில் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

எந்த அமைப்பினரும் ஊர்வலம், பேரணியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்பிற்கு சிலருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட சிலர் மட்டுமே ஆற்றுப் பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்த வேண்டும் என காவல்துறை தெரிவித்தது.

இதனையடுத்து கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர் சிலை அருகில் காவல்துறையினர் தற்காலிக சோதனை சாவடி அமைத்து அஞ்சலி செலுத்த வரும் நபர்களின் அமைப்பு , பெயர் விபரங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு சிலர்  மட்டும் ஆற்றிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 
மாஞ்சோலை படுகொலை: உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி நதிக்கரையில் நினைவஞ்சலி!

இதனையடுத்து இந்து மக்கள் கட்சி , கம்யூனிஸ்ட் கட்சிகள் , காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் , பல்வேறு அமைப்புகள் என தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் . இதனையொட்டி ஆற்று பகுதியில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,

மேலும் ஆற்று பகுதியில் அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழ்ந்துவிடாத வண்ணம் தீயணைப்புத்துறையின் சார்பில் பைபர் படகுடன் ஆற்றுப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் 

தலைப்பு செய்திகள்

Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
Embed widget