மேலும் அறிய

கோவில்பட்டியில் வாகன காப்பக உரிமையாளர் மிளகாய் பொடி தூவி கொலை - இளம் சிறார் உட்பட இருவர் கைது

கோவில்பட்டியில் தனியார் இருசக்கர வாகன காப்பக உரிமையாளர் வெட்டி படுகொலை - போலீசார் விசாரணை 

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கணவன் மனைவி மிளகாய் பொடி தூவி வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில்பட்டியிலும் அதே போன்று கொலை அரங்கேறி உள்ளது.


கோவில்பட்டியில் வாகன காப்பக உரிமையாளர் மிளகாய் பொடி தூவி கொலை - இளம் சிறார் உட்பட இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் சாத்தூர் வாழவந்தாபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவர் இருசக்கர வாகன காப்பகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு ஆனந்தராஜ் வாகன காப்பகதில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலையில் ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்து கிடந்துள்ளார். அவரது உடலை சுற்றி மிளகாய் பொடி கிடந்துள்ளது. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 


கோவில்பட்டியில் வாகன காப்பக உரிமையாளர் மிளகாய் பொடி தூவி கொலை - இளம் சிறார் உட்பட இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலையத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வாழவந்தாபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (30) என்பவர் இருசக்கர வாகன காப்பகம் நடத்தி வருகிறார். இரவு ஆனந்தராஜ் வழக்கம்போல பணியில் இருந்துள்ளார். பின்னர் வாகன காப்பகம் முன்பு கட்டில் போட்டு தூங்கி உள்ளார். இந்நிலையில் அதிகாலையில் வாகன காப்பகத்தில் வாகனங்களை நிறுத்தியவர்கள் எடுக்க வந்தபோது , ஆனந்தராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மேலும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவில்பட்டியில் வாகன காப்பக உரிமையாளர் மிளகாய் பொடி தூவி கொலை - இளம் சிறார் உட்பட இருவர் கைது

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து குற்றவாளிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனந்தராஜை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அவரது உடலை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பியுள்ளனர்.


கோவில்பட்டியில் வாகன காப்பக உரிமையாளர் மிளகாய் பொடி தூவி கொலை - இளம் சிறார் உட்பட இருவர் கைது

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.வாகன காப்பகத்தை ஆனந்தராஜின் உடன்பிறந்த அண்ணன் சுந்தர்ராஜ் என்பவர் நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் ஆனந்தராஜிடம் ரூ.3.80 லட்சத்திற்கு 2 ஆண்டிற்கு குத்தகைக்கு கொடுத்தாராம். பின்னர் அவர் வாகன காப்பக உரிமையை திருப்பி கேட்டபோது அவர் ரூ.5லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சுந்தர்ராஜின் 19 வயது மகன் மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவன் சேர்ந்து ஆனந்தராஜை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget