மேலும் அறிய

கன்னியாகுமரியில் ஒயர் திருட சென்ற இடத்தில் உயிரைவிட்ட 2 திருடர்கள்

’’டான்போஸ்கோ மற்றும் ராபர்ட் ஆகியோர் பல இடங்களில் திருடுவதும், அதன்மூலம் மது குடித்துவிட்டு ஊர் சுற்றுவதையும் வாடிக்கை’’

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையை ஒட்டிய மீட் தெருவில்  பயன்பாட்டில் இல்லாமல் நீண்ட காலமாக பூட்டிய நிலையில் பாழடைந்த ஓட்டுக் கட்டடம் ஒன்று உள்ளது. அந்த கட்டட வளாகத்தினுள் புதர்களுக்கிடையே இரண்டு வாலிபர்கள்  உயிரிழந்து கிடப்பதாக வடசேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. டி.எஸ்.பி நவீன்குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இறந்த இருவரது உடலும் ஒட்டியவாறு கிடந்தது. அவர்களைப் பற்றி போலீஸர் விசாரணையில் இறங்கினர். அதில் ஒருவர் பெயர் டான் போஸ்கோ (20) எனவும், மற்றொருவர் கருங்கல் பகுதியை சேர்ந்த ராபர்ட் (33) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரும் சேர்ந்து நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பாழடைந்த ஓட்டு வீட்டில் இருவரும் மின் ஒயர்களை திருடுவதற்காக சென்றுள்ளார்.


கன்னியாகுமரியில் ஒயர் திருட சென்ற இடத்தில் உயிரைவிட்ட 2 திருடர்கள்

வீட்டில் உள்ள ஓயர்களை கட்டிங் பிளேயரால் வெட்டி சுருட்டி எடுத்துள்ளனர். பின்னர் வெளியே வந்தவர்கள் கைகளில் ஒரு மின்கம்பி தட்டுப்பட்டுள்ளது. அது வீட்டின் வெளிபுறத்தில் நிற்கும் மின்கம்பத்தில் இருந்து வீட்டு காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்டுள்ள ஸ்டே கம்பியாகும். அவர்கள் அந்த ஸ்டே கம்பியை கட்டிங்பிளேயரால் வெட்டி எடுக்க முயன்றுள்ளனர்.  ஸ்டே கம்பியை எளிதில் வெட்ட முடியாததால் அந்த கம்பியை பிடித்து இழுத்துள்ளர். அதில் ஸ்டே கம்பி மின் கம்பத்தில் செல்லும் மின்சார ஒயரில் பட்டு ஷாக் அடித்துள்ளது. அதனால் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களின் உடலை மீட்ட வடசேரி போலீஸார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "இந்த பாழடைந்த கட்டடத்தை ஒட்டியுள்ள பெரிய கட்டடங்களில் வந்த சிலர் புதர்களுக்கு மத்தியில் இருவர் கிடந்ததை கண்டுள்ளனர். உடனே எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாங்கள் சென்று பார்த்தபோது அவர்கள் மின்கம்பத்தில் இருந்து செல்லும் ஸ்டே கம்பியை பிடித்தபடி இறந்து கிடந்தனர். எனவே அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்பதை உறுதி செய்தோம்.


கன்னியாகுமரியில் ஒயர் திருட சென்ற இடத்தில் உயிரைவிட்ட 2 திருடர்கள்
டான்போஸ்கோ மற்றும் ராபர்ட் ஆகியோர் பல இடங்களில் திருடுவதும், அதன்மூலம் மது குடித்துவிட்டு ஊர் சுற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருவர் மீதும் பல திருட்டு வழக்குகள் உள்ளன. ராபர்ட் மீது 2019 ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கும் பதிவாகியுள்ளது. மீட் தெதுவில் பாழடைந்த வீட்டை நோட்டமிட்ட இவர்கள் மின் கம்பியை திருட முயன்றபோது மின்சாரம் தாக்கி இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய கட்டிங் பிளேயரை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Victory Parade LIVE: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
Team India Victory Parade LIVE: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Victory Parade LIVE: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
Team India Victory Parade LIVE: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Embed widget