மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
கர்ப்பம் எனக் கூறி அரசின் உதவித்தொகையை பெற்ற இளம்பெண்- கணவரை ஏமாற்றியது அம்பலம்
தனது ஊரிலும் கர்ப்பிணி என்று கூறிக்கொண்டு இளம்பெண் சுற்றி வந்துள்ளார்.
![கர்ப்பம் எனக் கூறி அரசின் உதவித்தொகையை பெற்ற இளம்பெண்- கணவரை ஏமாற்றியது அம்பலம் kanyaKumari district woman was tricked into claiming she was pregnant and received a government subsidy. கர்ப்பம் எனக் கூறி அரசின் உதவித்தொகையை பெற்ற இளம்பெண்- கணவரை ஏமாற்றியது அம்பலம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/c64edec3bc04656c37e73c877d6b42cc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதிரிப்படம்
குமரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கர்ப்பம் எனக் கூறி ஏமாற்றி அரசின் உதவித்தொகை பெற்றுள்ளார். வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு கர்ப்பம் என கணவர் உட்பட உறவினர்களையும் ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இரவிபுதூர் கடை அருகே உள்ள குருவிளைகாடு காலனியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான 2 மாதத்தில் கர்ப்பம் அடைந்ததாக கூறிய இளம்பெண், அப்போதே கணவர் வீட்டில் இருந்து தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார். தனது ஊரிலும் கர்ப்பிணி என்று கூறிக்கொண்டு இளம்பெண் சுற்றி வந்துள்ளார். மேலும் கர்ப்பிணிகளுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை அரசு வழங்கும் உதவித் தொகைக்கும் இளம்பெண் விண்ணப்பித்து உள்ளார். அவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டு அவருக்கு உதவித் தொகையும் வழங்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சையை முறைப்படி பெற்ற அந்தப் பெண்ணுக்கு பிரசவ காலமும் வந்து விட்டது. இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக ஊரில் கூறிவிட்டு இளம்பெண் தாயுடன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்ற மறுநாளே, ஊருக்குத் திரும்பிய பெண், மூளை வளர்ச்சி பெறாமல் குழந்தை வயிற்றுக்குள்ளேயே இறந்து விட்டதாகவும், ஆபரேசன் செய்து தான் குழந்தை உடலை எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்தார். அவரது பேச்சு ஊர் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. குழந்தை உடல் எங்கே என்று கேட்ட போது மருத்துவமனையில் தரவில்லை என்று கூறியுள்ளார். இதனால் பொதுமக்களுக்கு மேலும் சந்தேகம் வலுத்தது. ஆபரேசன் செய்த பெண் உடனடியாக எப்படி வீடு திரும்பமுடியம் என கேள்வியும் எழுந்தது.
![கர்ப்பம் எனக் கூறி அரசின் உதவித்தொகையை பெற்ற இளம்பெண்- கணவரை ஏமாற்றியது அம்பலம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/20/9831ff22a340c30525896a79de941085_original.jpg)
இது தொடர்பாக தக்கலை அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்ட போது குறிப்பிட்ட இளம்பெண் கர்ப்பமே தரிக்கவில்லை என்பதும், அவர் வயிற்றில் துணியைக் கட்டிக் கொண்டு உறவினர்களையும் ஊராரையும் ஏமாற்றி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது. மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை. மேலும் பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அவரது தாயாரிடம் இதுகுறித்து எழுதி வாங்கிவிட்டு அனுப்பி விட்டதாகவும் கூறியுள்ளனர். இதன்மூலம் கர்ப்பிணி நாடகம் ஆடிய பெண்ணின் குட்டு அம்பலமானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் கணவர் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் போலீஸ் நிலையம் விரைந்து வந்தனர். அங்கு தன்னை ஏமாற்றிய பெண் இனி வேண்டாம் என கணவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு வீட்டாரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்ப்பிணி எனக் கூறி ஏமாற்றிய இளம்பெண் அரசின் உதவித் தொகையை எப்படி பெற்றார்? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தக்கலை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜையன் கூறுகையில், நிறைமாத கர்ப்பிணி என இளம்பெண் தாயாருடன் வந்து சிகிச்சைக்கு சேர்ந்தார். ஆனால் அவர் கர்ப்பம் இல்லை என பரிசோதனையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்தப் பெண்ணை எச்சரித்து, அவரது தாயாரிடம் எழுதி வாங்கி விட்டு அனுப்பி வைத்தோம். இளம்பெண்ணுக்கு ஆபரேசன் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion