மேலும் அறிய

Thoothukudi: இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரர் வழக்கில் இன்று தீர்ப்பு

ஜோனதன் தோர்ன் வைத்திருந்த செல்போனில் உள்ள தகவல்களை இன்னும் பெற இயலவில்லை- செல்போன் பாஸ்வேர்டை மறைக்கும் கடத்தல்காரர்.

தூத்துக்குடியில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரர் ஜோனதன் தோர்னுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.


Thoothukudi: இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரர் வழக்கில்  இன்று தீர்ப்பு

தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி கடற்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பவரை கியூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10-ந் தேதி மடக்கி பிடித்தனர். அவர் மும்பையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இவர் 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜோனாதன் தோர்ன் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்றுள்ளார். இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோனதன் தோர்னை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, குற்றம் சாட்டப்பட்ட ஜோனதன் தோர்னுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


Thoothukudi: இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரர் வழக்கில்  இன்று தீர்ப்பு

இதனை எதிர்த்து ஜோனதன் தோர்ன் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை முதன்மை மாவட்ட நீதிபதி செல்வம் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்று மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக பட்டியலிடப்பட்டு உள்ளது.


Thoothukudi: இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரர் வழக்கில்  இன்று தீர்ப்பு

திறக்கப்படாத செல்போன் மேலும் ஜோனதன் தோர்ன் ஒரு உயர்ரக செல்போனை வைத்து இருந்தார். அந்த செல்போனில் உள்ள தகவல்களை பெறுவதற்காகவும், முக்கிய ஆவணங்களை சேகரிப்பதற்காகவும் கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த செல்போனின் பாஸ்வேர்டை ஜோனதன் தோர்ன் தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் கோர்ட்டு உத்தரவு பெற்று, அந்த செல்போனில் உள்ள தகவல்களை பெறுவதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வகத்துக்கு போலீசார் செல்போனை அனுப்பி வைத்தனர். ஆனால் ஆய்வகத்திலும் அந்த செல்போனை திறக்க முடியவில்லை. இதனால் ஜோனதன் தோர்ன் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட வந்தாரா?, வேறு யாருக்காவது தொடர்புகள் உள்ளதா?, ஏதேனும் தடயங்கள் உள்ளதா? என்பது தெரியாமல் மர்மம் நீடிக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.