![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
நெல்லை : இன்று மட்டும் 612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை. இந்த மாத ஆரம்பத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 இலக்க எண்ணாக இருந்தது தற்போது 3 இலக்க எண்ணாக மாறியுள்ளது.
![நெல்லை : இன்று மட்டும் 612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.. In Nellai today alone, 612 people have been confirmed to be infected with the corona virus. நெல்லை : இன்று மட்டும் 612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/25/0c2a274f8c9767ad36c19211824db2d4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 266 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35568-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 126 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 33673-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 654 இருக்கிறது. இந்நிலையில் 1241 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தேனி , தென்காசி , நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் விசாரித்தோம்.
தேனி மாவட்டத்தில் இன்று 387 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48671-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 294 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45208-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 527 இருக்கிறது. இந்நிலையில் 2936 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 612 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 59080 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 593 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 54308-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 441 இருக்கிறது. இந்நிலையில் 4331 கொரோனா பாதிப்பால் நெல்லை சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 347 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62825-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 307 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 59943-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்றுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர் . இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 434 இருக்கிறது. இந்நிலையில் 2448 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)