மேலும் அறிய

குப்பை அள்ள ஒரு கோடிக்குக்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் குப்பையில் கிடைக்கும் அவலம்...!

96 லட்சம் மதிப்பீட்டில் 55 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில் தற்போது வெறும் 8 பேட்டரி வாகனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன, எஞ்சிய வாகனங்கள் பழுந்தடைந்து ஓரங்கட்டப்பட்டன

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசின் தூய்மை இந்தியா, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிறிய ஆட்டோ வடிவிலான 52 பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் வாங்கப்பட்டன. ஒரு பேட்டரி வாகனத்தின் விலையானது 1 லட்சத்து 85 ஆயிரம் விகிதம்  96 லட்ச ரூபாய் மதிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வாங்கப்பட்டன. முதல் 6 மாதங்கள் வரை இந்த வாகனங்கள் நன்றாக ஓடிய நிலையில்,  பின்னர் பேட்டரி பழுது ஏற்பட்டு ஓரங்கட்டப்பட்டன. அவ்வப்போது பழுதான வாகனங்கள் சரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தற்பொழுது 52 வாகனங்களில் 8 வாகனங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டில் உள்ளன. மற்ற 44 வாகனங்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளன.

குப்பை அள்ள ஒரு கோடிக்குக்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் குப்பையில் கிடைக்கும் அவலம்...!

கோவில்பட்டி பழைய நகராட்சி அலுவலகம், புதிய நகராட்சி அலுவலகம், பசுவந்தனை சாலையில் உள்ள பூங்கா பகுதியில் குப்பை கிடங்கு போல பேட்டரி வாகனங்கள் காட்சி பொருளாக மாறியுள்ளது. பல வாகனங்களில் டயர்கள், டோர்கள் மற்றும் பேட்டரிகள் என எதுவும் இல்லமால் உள்ளது. சில பேட்டரி வாகனங்கள் அப்பளம் போல காட்சியளிக்கிறது. குப்பைகளை அகற்ற வாங்கப்பட்ட வாகனங்கள் தற்பொழுது குப்பையில் கிடக்கும் அவல நிலையில் உள்ளது.

குப்பை அள்ள ஒரு கோடிக்குக்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் குப்பையில் கிடைக்கும் அவலம்...!

இதற்கிடையில் சமூக ஆர்வலர் முருகன் என்பவர் மக்கள் வரிபணத்தில் வாங்கப்பட்ட இந்த பேட்டரி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றிக்கு புகார் மனு அனுப்பினார். இதையெடுத்து இந்தாண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்ற மதுரை கிளை முருகன் மனு மீது விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட நீதிபதிக்கு அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மக்கள் நீதமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஒரு மாதகாலத்திற்குள் சரி செய்து அனைத்து பேட்டரி வாகனங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர். ஆனால் தற்பொழுது வரை அதனை இயக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குப்பை அள்ள ஒரு கோடிக்குக்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் குப்பையில் கிடைக்கும் அவலம்...!

பேட்டரி வாகனங்கள் பழுது என கூறி ஈரோட்டில் இருந்து பழுதுபார்க்கும் நபர்களை அழைத்துவந்து  பழுது பார்க்கின்றனர். ஆனால் பழுது பார்த்த மறுநாள் அந்த வாகனங்கள் இயங்குவதில்லை என்றும், எனவே பேட்டரி வாகனங்களை பழுது பார்க்க நகராட்சி அலுவவலக வளாகத்தில் பழுது நீக்கம் மையம் அமைத்து பேட்டரி வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவில்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பை அள்ள ஒரு கோடிக்குக்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் குப்பையில் கிடைக்கும் அவலம்...!
பேட்டரி வாகனங்கள் பழுதடைந்து இருப்பது குறித்து நகராட்சி ஆணையர் கிருஷ்ண மூர்த்தியிடம் கேட்ட போது, பழுதான வாகனங்களின் பழுது நீக்குவதற்கு எவ்வளவு பணம் செலவு ஆகும் என்று கணக்கீடு செய்யப்பட  அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த விபரங்கள் வந்தததும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget