மேலும் அறிய

திருமணம் நடக்க இருந்த இளைஞர் விபத்தில் மரணம் - கன்னியாகுமரியில் சோகம்

திருமணம் நடக்க இருந்த நிலையில் பிரதீஷ் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரழ்ந்தனர். அதில் ஒருவர் திருமண பத்திரிகை கொடுத்து விட்டு வரும் போது இறந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நெய்யூர் ஆத்திவிளை காமராஜர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் பிரதீஷ் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அதற்காக 4 நாட்களுக்கு முன்பு பிரதீஷ் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அவர் நேற்று மதியம் நெய்யூர் பால் தெரு பகுதியை சேர்ந்த ரெஜு (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று திருமண பத்திரிகைகளை கொடுத்து விட்டு, இரணியல் கோணம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்தனர். மோட்டார் சைக்கிளை பிரதீஷ் ஓட்டினார். அப்போது பொன்மனை காந்திநகர் பகுதியை சேர்ந்த கிறிஸ்துதாஸ் மகன் ராஜசேகர் ( 40) மற்றும் ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த ராஜன் (48) என்பவரும் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
 

திருமணம் நடக்க இருந்த இளைஞர் விபத்தில் மரணம் - கன்னியாகுமரியில் சோகம்
 
கண் இமைக்கும் நேரத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பிரதீஷ், ராஜசேகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரெஜு படுகாயம் அடைந்தார். அவரை உடனே சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ராஜனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ராஜசேகர் மற்றும் ராஜன் ஆகிய இருவரும் முள்வேலி அமைக்கும் பணி செய்து வந்ததும், முட்டம் பகுதியில் முள்வேலி அமைக்கும் பணியை முடித்து விட்டு வந்த போது விபத்தில் சிக்கியதும் தெரிய வந்தது. திருமணம் நடக்க இருந்த நிலையில் பிரதீஷ் விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக-வில் இணைகிறார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
திமுக-வில் இணைகிறார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
ஓணம் வந்தல்லே... டாடா ஆஃபர் தந்தல்லே.. ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - எந்த காருக்கு?
ஓணம் வந்தல்லே... டாடா ஆஃபர் தந்தல்லே.. ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - எந்த காருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்
Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-வில் இணைகிறார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
திமுக-வில் இணைகிறார் மைத்ரேயன்.. அதிமுக-வுக்கு குட்பை.. காலியாகும் முன்னாள் எம்பிக்கள்!
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
Accident: கொடூரம்.. 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பேர் பலி - கோயிலுக்கு சென்று திரும்பியபோது கோர விபத்து
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
ADMK BJP: எடப்பாடியை கடுப்பேற்றும் பாஜக? நயினார் நாகேந்திரன் பேச்சால் அப்செட் - கூட்டணி குழப்பம் முடியுமா?
ஓணம் வந்தல்லே... டாடா ஆஃபர் தந்தல்லே.. ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - எந்த காருக்கு?
ஓணம் வந்தல்லே... டாடா ஆஃபர் தந்தல்லே.. ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - எந்த காருக்கு?
"குழந்தைங்க பொறக்கல.. அதான் மாணவர்கள் சேரல" 208 அரசுப்பள்ளிகளை மூடுவதற்கு இதான் காரணமாம்!
ஆடி மாதத்தின் கடைசி வாரம் - தவற விடாதீர்கள்!!!
ஆடி மாதத்தின் கடைசி வாரம் - தவற விடாதீர்கள்!!!
Tamilnadu power cut: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் எல்லாம் மின் விநியோகம் நிறுத்தம்
Tamilnadu power cut: சென்னையில் இன்று இந்த பகுதிகளில் எல்லாம் மின் விநியோகம் நிறுத்தம்
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
RSS BJP: மோடியை தனிமரமாக்க ஆர்எஸ்எஸ் திட்டம் - தலையை விட்டு கிளைகளை வெட்டி எறிய முடிவு - சிக்கப்போவது யார்?
Embed widget