மேலும் அறிய

பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?

அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்களை, தேர்வு முடியும் முன்னரே செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு இன்று (டிசம்பர் 10) தொடங்கியுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடக்கிறது.

அதேபோல 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கும் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. 

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (டிசம்பர் 10ஆம் தேதி) தமிழ் தேர்வுடன் அரையாண்டுத் தேர்வு தொடங்கி உள்ளது. தொடர்ந்து 12ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வும் 15ஆம் தேதி கணக்குப் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வியாழக் கிழமை அன்று அறிவியல் பாடத் தேர்வு நடக்கிறது. அதேபோல 22ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வும் 23ஆம் தேதி விருப்பப் பாடத்துக்கும் அரையாண்டுத் தேர்வு நடக்க உள்ளது.

பிளஸ் 2 தேர்வு அட்டவணை

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இன்று தமிழ் தேர்வு தொடங்கி உள்ளது. தொடர்ந்து 12ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வும் 15ஆம் தேதி கணக்குப் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது. டிசம்பர் 23 வரை தேர்வுகள் நடக்கின்றன.

இவர்கள் அனைவருக்கும் காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்துப் பார்க்கவும் அடுத்த 5 நிமிடங்கள் தேர்வரின் விவரங்களை சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சரியாக 10 மணிக்குத் தேர்வு தொடங்கி, 1 மணி வரை நடைபெற உள்ளது.

1 முதல் 5ஆம் வகுப்புக்கு எப்போது?

அதேபோல தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் 23ஆம் தேதி வரை இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடக்க உள்ளது.

அரையாண்டு விடுமுறை, பள்ளிகள் திறப்பு எப்போது?

டிசம்பர் 23ஆம் தேதியோடு அரையாண்டுத் தேர்வுகள் முடிவுபெறும் நிலையில், 24ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு தினம் ஆகிய கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்த பிறகு ஜனவரி 4ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

புகைப்படம் எடுக்கத் தடை

இதற்கிடையே அரையாண்டுத் தேர்வு வினாத்தாள்களை, தேர்வு முடியும் முன்னரே செல்போனில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. தேர்வு நேரம் முடிந்தபிறகே மாணவர்களிடம் விடைத் தாள்களைப் பெற வேண்டும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget