மேலும் அறிய

ஆளுநர் அரசையோ, பாடதிட்டத்தையோ வசைபாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் - சபாநாயகர்

”சனாதன தர்மத்தை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்றும், வீர சாவர்க்கர் வரலாறு இல்லையே அந்த இடத்தில் வ.உ.சி வரலாறு இருக்கிறது என்றும் தமிழ்நாடு ஆளுநர் வருத்தப்படலாம்”

தமிழ்நாடு அரசின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவை மதுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நெல்லையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 14 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் 727 கோடி ரூபாய் கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏற்கனவே 302 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரே நாளில் 54 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. மாண்புமிகு ஆளுநர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை தவற மீதி பணியில் இருப்பது போல தான் எல்லோரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார். அது உண்மையல்ல, தவறு. 

சனாதன தர்மத்தை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்றும், வீர சாவர்க்கர் வரலாறு இல்லையே அந்த இடத்தில் வ.உ.சி வரலாறு இருக்கிறது என்றும் தமிழ்நாடு ஆளுநர் வருத்தப்படலாம். சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது மூன்று முறை மன்னிப்பு கடிதம் கொடுத்தும் அது ஏற்கப்படாத நிலையில் நான்காவது முறை மன்னிப்பு கடிதம் கொடுத்து வெளியே வந்த சாவர்க்கர் பின் நாட்களில் பிரிட்டிஷ் அரசின் சாதனையை எடுத்துச் சொல்ல மாதம் 67 ரூபாய் சம்பளம் வாங்கியதாக வரலாறு உள்ளது. காட்டி கொடுப்பவர்களும், மன்னிப்பு கேட்ட  சாவர்க்கரின் வரலாற்றையும் எப்படி பிஞ்சு உள்ளங்களுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.  நம் சுதந்திர போராட்ட வீரர்களெல்லாம் தியாகம் செய்தவர்கள். தமிழ்நாடு பாடத்திட்டத்தில் சேர்க்க முடியாது. அவருக்கு ஒரு வருத்தம் இருக்கலாம். தமிழ் நாட்டில் படிப்பில் நம்பர்  1 ஆக இருக்கிறது. 18 துறை சார்ந்த கல்வித்துறையில் 13 இல் தமிழ்நாடு தான் முதலிடம் பிடித்துள்ளது. ஆளுநர் மனதில் என்ன இருக்கிறதென்றே தெரியவில்லை. 

உலகில் தோன்றிய முதல் 3 மொழிகளில் தமிழ் ஒன்று. இந்தியாவில்  தோன்றிய தமிழ், இந்தியாவில் ஆட்சி மொழியல்ல. தமிழகத்தில் மட்டும் தான் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால் தமிழ் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா  உட்பட 7 நாடுகளில் ஆட்சி மொழியாக இந்தியாவில் தோன்றிய ஒரு இருக்குமேயானால் அது தமிழ்மொழி. அப்படியென்றால் எந்த மாநிலமாக இருந்தாலும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்று சொல்ல ஏன் மறுக்கின்றனர்? புதிய கல்விக் கொள்கை மூலமாக மீண்டும் ஆர் எஸ் எஸ் மற்றும் சனாதன சித்தாந்தத்தை கொண்டுவர பார்க்கிறார்கள். 10 சதவீத வகுப்பினர் மட்டும் படிக்க வேண்டும். 90% பேர் படிக்கக் கூடாது எனவும் ஆளுநர் ஆசைப்படுகிறார். அத்துடன் தமிழ்நாடு அரசு பள்ளிகள் குறித்தும், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டங்கள் குறித்து வசைபாடுவதை இதோடு ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: தவறு நடந்தது எங்கே? விமானம் கீழே விழுந்து நொறுங்கியது எப்படி? வல்லுநர்கள் விளக்கும் காரணம்
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
Ahmedabad Plane Crash: விமானத்தில்..யாரையும் காப்பாற்ற முடியாது ஏன் தெரியுமா? கருகிப்போன லண்டனில் செட்டில் ஆகும் கனவு
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. பதற்றத்துடன் நடந்து செல்லும் காட்சி 
ஆயிரத்தில் ஒருவன்.. விமான விபத்தில் உயிர் தப்பிய அந்த ஒரு நபர்.. யார் இந்த ரமேஷ்?
Musk Spoke to Trump: பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
பஞ்சாயத்து முடிஞ்சுடுச்சு, எல்லாரும் கிளம்புங்க; ட்ரம்ப்பிடம் பேசிய மஸ்க் - என்ன கூறினார் தெரியுமா.?
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
’’சரியாக வேலை செய்யவில்லை; ஏதோ தவறாக உணர்ந்தேன்’’- விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர் பதிவு!
Air India Plane Crash: அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
அகமதாபாத் கோர விமான விபத்துக்கு காரணம் பறவைகளா.? - DGCA கூறுவது என்ன தெரியுமா.?
Vadapalani Bus Terminal: டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
டோட்டலாக மாறப் போகும் வடபழனி; ரூ.481 கோடில என்ன வரப்போகுது தெரியுமா.? கேட்டா அசந்துடுவீங்க.!
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
பிளக்கும் சத்தம், புகை, தீ குழம்பு..நடந்தது இதுதான்! விமான விபத்தை நேரில் பார்த்தவர் பரபரப்பு பேட்டி
Embed widget