மேலும் அறிய

நெல்லை - குமரி மீனவர்கள் இடையே மோதல்; நாட்டு வெடிகுண்டு வீச்சு

விசைப்படகு மீனவர்கள் கடற்கரையை ஒட்டிய  பகுதிகளில் மீன்பிடிக்க  கூடாது என்பதும் 12 கடல் மைல்க்கு அப்பால் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்பதும் விதியாகும்.

கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஐந்து விசைப்படகுகள் இழுவலைகள் மூலம் நெல்லை இடிந்தகரை கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் வலை விரித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சிலர்  கடலுக்குள் சென்று அவர்களை எச்சரித்துள்ளனர். மேலும் கடற்கரையை ஒட்டி மீன் பிடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். ஆனாலும் அவர்கள் செல்லாமல் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இடிந்தகரையை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் சுமார் 12 வள்ளங்களில் சென்று அவர்களை விரட்டி அடித்துள்ளனர்.  மேலும் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரே விசைப்படகு மீனவர்கள் அங்கிருந்து தங்கள் பகுதிக்கு திரும்பி சென்று உள்ளனர். இதுகுறித்து சின்ன முட்டம் பகுதியைச் சார்ந்த விசைப்படகு ஓட்டுநர் கிறிஸ்டி என்பவர் கடலோர பாதுகாப்பு குழும  காவல்துறையினர் புகார் கொடுத்துள்ளார்.  அவர் கொடுத்த புகாரின் பேரில் இடிந்தகரையைச் சார்ந்த ஜெனிஃபர், வளன், ராயப்பன், சைல்ஸ் ஆனந்த், சிபி, பீட்டர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசைப்படகு மீனவர்கள் கடற்கரையை ஒட்டிய  பகுதிகளில் மீன்பிடிக்க  கூடாது என்பதும் 12 கடல் மைல்க்கு அப்பால் சென்று மீன்பிடிக்க வேண்டும் என்பதும் விதியாகும். ஆனால் அவ்வப்போது விசைப்படகு மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர்களின் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதோடு அவர்கள் விரித்திருக்கும் வலைகள் மற்றும் உபகரணங்களை சேதப்படுத்தி செல்வதாக கூறி இரு மாவட்ட மீனவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழலில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Breaking News LIVE 1st OCT 2024: சிவாஜி கணேசனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
”ஆன்லைனில் அதிக வருவாய்?” : ரூ.39.25 லட்சம் மோசடி.. புதுச்சேரி போலீஸின் அதிரடி கைது..
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
திருமலை நாயக்கர் மஹால், மீனாட்சி கோயில்..மதுரையின் முக்கிய அடையாளங்கள் அழகான ட்ரோன் புகைப்படங்கள்!
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
Salem Leopard: சிறுத்தை மரணத்தில் அதிர்ச்சி தகவல்கள்... சேலம் வனத்துறையினர் தீவிர விசாரணை.
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
J-K Election: ஜம்மு & காஷ்மீரில் இன்று கடைசி கட்ட வாக்குப்பதிவு - 40 தொகுதிகள் , 415 வேட்பாளர்கள், 39 லட்சம் வாக்காளர்கள்
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Modi Israel PM: கொன்று குவிக்கும் இஸ்ரேல்..! பிரதமர் நேதன்யாகுவிடம் தொலைபேசியில் உரையாடிய மோடி
Embed widget