மேலும் அறிய

சாராயம் விற்று குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு - செஞ்சி மஸ்தான்

எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் அவர்களை நோக்கி பார்க்க வேண்டும்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 293 பயனாளிகளுக்கு 22 லட்சத்து 3 ஆயிரத்து 280 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், வெளிநாடுகளுக்கு தமிழர்களை வேலைக்கு அனுப்ப 103 பேர் பதிவு செய்யபட்ட ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களை அழைத்து  கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வேலைக்குச் சென்று பாதிப்படையும் நபர்கள் அனைவரும் போலியான நபர்கள் மூலமே வேலைக்கு அனுப்பப்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத போலி ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் பணியில் போலி ஏஜெண்டுகளாக செயல்பட்ட நான்கு பேர் மீது இதுவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


சாராயம் விற்று குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு - செஞ்சி மஸ்தான்

உக்ரைன் நாட்டில் படித்து மீண்டும் தமிழகத்தில் அவர்கள் பொறியியல் மற்றும் வேளாண்மை படிப்புகளை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள பாடத்திட்டத்திற்கும் இங்குள்ள பாடத்திட்டத்திற்கு வித்தியாசம் இருப்பது, நீட் தேர்வு இருப்பதால் மருத்துவ படிப்பை இங்கு தொடர வாய்ப்பில்லை. எனவே மாணவர்கள் படித்த வெளிநாடுகளிலேயே தொடருவதற்கு  விரும்புகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை தூதரகங்கள் மூலம் செய்து கொடுப்பதற்கு அரசு தயராக உள்ளது. மத்திய அரசிடம் உக்ரைனில் படித்த தமிழக மாணவர்கள் உள் நாட்டில் மருத்துவபடிப்பை தொடர தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. நீட்தேர்வு இருப்பதால் அதனை செயல்படுத்த முடியவில்லை. வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான கேள்விக்கு எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர தொழிலை மாற்ற மாட்டார்கள். சமூக விரோதிகள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்த பாகுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் அவர்களை நோக்கி பார்க்க வேண்டும். தூத்துக்குடியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காலத்தில் அப்போதைய முதலமைச்சர் அவர்களை சென்று கூட பார்க்கவில்லை. ஆனால் தற்போது முதல்வர் அனைவரையும் நேரில் சென்று பார்த்து உள்ளார். குற்றம் புரிந்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில் எவ்வித பாகுபாடும் பார்க்கபடாது என முதல்வர் கூறிவிட்டார். விஷச்சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் அமைச்சருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படத்தை வைத்து விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு திருமண நாள், பிறந்தநாள் போன்றவைகளுக்கு வாழ்த்து பெற வருகிறார்கள், பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துகொள்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
    


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget