மேலும் அறிய

”மலநாடு நிறுவனத்தில் அமோனியா கசிவு?” அச்சத்தில் நெல்லை அணைந்தநாடார்பட்டி மக்கள்..!

"மலநாடு அமோனியா ஆலையை மூட வேண்டும் என்று கடந்த மார்ச் மாதமே திமுக சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை”

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் – ஆலங்குளம் சாலையில் அணைந்தநாடார்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள ”மலநாடு” என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து, கடந்த சனிக்கிழமை அமோனியா கசிவு ஏற்பட்டு, அருகே தோட்டத்தில் பணி செய்துக்கொண்டிருந்த மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் மலநாடு அமோனியா நிறுவனத்தில் ஆய்வு நடத்தியுள்ள நிலையில், பெரிய ஆபத்து ஏதும் ஏற்படும் முன்னர், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.”மலநாடு நிறுவனத்தில் அமோனியா கசிவு?” அச்சத்தில் நெல்லை அணைந்தநாடார்பட்டி மக்கள்..!

பள்ளி அருகே இருக்கும் அமோனியா ஆலை – பயத்தில் பெற்றோர்கள்

மலநாடு அமோனியா ஆலை செயல்படும் பகுதியிலேயே 50 அடி தூரத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஒருவேளை, அமோனியா கசிவு இங்கு ஏற்பட்டால் அந்த பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு, ஆலையை முறையாக ஆய்வு செய்து, அமோனியா கசிவு இருந்தால் மலநாடு ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.”மலநாடு நிறுவனத்தில் அமோனியா கசிவு?” அச்சத்தில் நெல்லை அணைந்தநாடார்பட்டி மக்கள்..!

சனிக்கிழமை நடந்தது என்ன ?

கடந்த 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று அணைந்தநாடார்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு திடீரென கண் எரிச்சல், வாந்தி, தொண்டை எரிச்சல் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் தனது தோட்டத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த ‘மலநாடு அமோனியா” நிறுவனத்திற்கு சென்று, விசாரித்தபோது, அமோனியாவை நிரப்பும்போது சிறிய கசிவு ஏற்பட்டது என நிர்வாகம் தரப்பில் தனக்கு தெரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், அணைந்தநாடார்பட்டி பகுதி மக்களும் அமோனியா கசிவு ஏற்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் உத்தரவில் நிறுவனத்தில் ஆய்வு செய்த வட்டாட்சியர்

இது குறித்து நெல்லை ஆட்சியர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்த நிலையில், வட்டாட்சியர் தலைமையில் குழுவினரை அனுப்பி மலநாடு நிறுவனத்தில் ஆய்வு நடத்த சொல்லியுள்ளார். ஆனால், ஆய்வு செய்த வட்டாட்சியர் சபரிமல்லிகா மற்றும் தொழிற் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் கணேசன் ஆகியோர், சனிக்கிழமை மலநாடு நிறுவனத்தில் என்ன நடந்தது, வாயு கசிவு ஏற்பட்டதா அல்லது இல்லையா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்பித்துள்ளனர்.

”மலநாடு அமோனியா நிறுவனம்”  சொல்வது என்ன ?

இது குறித்து மலநாடு அமோனியா நிறுவனத்தின் மேலாளர் ஜோசப்பை தொடர்புகொண்டு கேட்டபோது, ”அமோனியா கசிவு எதுவும் ஏற்படவில்லையென்றும் 20% நீராக இருக்கும் அமோனியா வேண்டுமென்றால் காற்றில் வெளியில் சென்றிருக்க வாய்ப்பு இருக்கும் எனவும், அதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லையென தெரிவித்துள்ளார்.  தங்களது நிறுவனத்தில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாகவும், அமோனியா கசிவு ஏற்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால், சனிக்கிழமை அருகே உள்ள தோட்டத்தில் பணி செய்தவர்கள் அமோனியா கசிவால் பாதிப்படைந்ததாக சொல்கின்றார்களே என கேட்டபோது, அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என சொல்லியுள்ளார்”

ஆலையை மூட வேண்டும் – திமுக சார்பில் மனு

“மலநாடு அமோனியா” ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று திமுக சார்பில் பாப்பாக்குடி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூங்கோதை சசிகுமார் என்பவர் கடந்த மார்ச் மாதமே சேரன்மகாதேவி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில், மலநாடு என்ற அமோனியா உற்பத்தி செய்யும் தனியார் ஆலையில் மாலை, இரவு நேரங்களில் அவ்வப்போது அமோனியா வாயு கசிவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன என்றும் இந்த ஆலையின் அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ள திமுக ஒன்றிய பெருந்தலைவர், அமோனியா கசிவால் சென்னை, மதுரையில் ஏராளமானவர்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு அதுபோன்று எதுவும் ஏற்பட்டுவிடாதபடி, ஆலையை நிரந்தரமாக மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனு மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.”மலநாடு நிறுவனத்தில் அமோனியா கசிவு?” அச்சத்தில் நெல்லை அணைந்தநாடார்பட்டி மக்கள்..!

நடவடிக்கை எடுக்குமா அரசு ?

அமோனியா வாயு கசிந்தால் அது பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கடந்த கால சம்பவங்கள் மூலம் இந்த நாடே அறிந்துள்ள நிலையில், மலநாடு நிறுவனத்தில் உரிய ஆய்வு செய்து, அமோனிய வாயு கசிவது உறுதியானால் உடனடியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்டால், பெரிய பாதிப்பை மக்கள் சந்திக்க நேரிடும் சூழல் ஏற்பட்டுவிடும் என்பதை அதிகாரிகளும் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget