மேலும் அறிய

தூத்துக்குடி- இலங்கை, தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கும், அதனை தொடர்ந்து கொழும்பு, ராமேசுவரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரிக்கும் கப்பல் சேவை தொடங்க நட வடிக்கை

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு ஏற்கெனவே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் அந்த சேவை சில மாதங்களுக்கு பிறகு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் சிறிய வகை பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அதன்படி 2 நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அந்த நிறுவனத்தினர் இலங்கையில் அனுமதி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் துறை முக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.



தூத்துக்குடி- இலங்கை,  தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

இந்த நிலையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை மையமாக வைத்து பல்வேறு இடங்களுக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கு தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது. தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன்துறை, தூத்துக்குடி-கொழும்பு, ராமேசுவரம் - தூத்துக்குடி-கன்னியாகுமரி ஆகிய கப்பல் சேவை தொடங்குவதற்காக துபாயில் உள்ள தனியார் நிறுவனத்துடன் வஉசி துறைமுக ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மும்பையில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்ற சர்வதேச கடல்சார் உச்சிமாநாட்டில் புரிந்துணரவு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.


தூத்துக்குடி- இலங்கை,  தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

இதுகுறித்து துறைமுக அதிகாரிகளிடம் கேட்டபோது, "தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்குவதற் கான ஒப்பந்தம் கையெழுத்தாகிள்ளது. 300 பயணிகள் செல்லும் வகையிலான கப்பல்கள் இயக்கப்பட உள்ளன. சில மாதங்களுக்குள் பயணிகள் கப்பல் தூத்துக் குடி வந்து சேரும். உடனடியாக தூத்துக்குடியில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கும், அதனை தொடர்ந்து கொழும்பு, ராமேசுவரம்-தூத்துக்குடி-கன்னியாகுமரிக்கும் கப்பல் சேவை தொடங்க நட வடிக்கை எடுக்கப் படவுள்ளது’’ என்றனர்.


தூத்துக்குடி- இலங்கை,  தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கியது. தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையத்தில் வைத்து அப்போதைய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜிகே வாசன் கொடியசைத்து பயணிகள் கப்பல் போக்குவரத்தினை துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிக்கு ஸ்கார்டியா பிரின்ஸ் என்ற சொகுசு கப்பல் பயணிகளை ஏற்றி சென்றது. மும்பையை சேர்ந்த பிளமிங்கோ டூயூட்டி பெய்டு ஷாப் என்ற நிறுவனம் பயணிகள் கப்பலை இயக்குவதற்கான அனுமதியை பெற்று இருந்தது. தூத்துக்குடியில் இருந்து 152 கடல் மைல் தொலைவில் உள்ள கொழும்வுக்கு இந்த கப்பல் 12 மணியிலிருந்து 14 மணி நேரத்திற்குள் சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெரும் ஆரவாரத்திற்கு இடையே துவக்கப்பட்ட இந்த கப்பல் சேவை ஆனாலும் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் நின்று போனது தற்போதும் கூட நாகை மற்றும் காங்கேசன் துறைமுகம் இடையே இயக்கப்பட்ட கப்பலும் தனது பயணத்தை நிறுத்தி கொண்டது.


தூத்துக்குடி- இலங்கை,  தூத்துக்குடி- மாலத்தீவு இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடியில் இருந்து பயணிகள் கப்பல் இலங்கை மற்றும் மாலத்தீவிற்கு இடையே இயக்கப்படுவதற்காக லிட்டோரல் குரூஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. ரூ 1200 கோடி திட்டமதிப்பீட்டில் துவக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வரவேற்கக்கூடியதாக இருந்தாலும் தூத்துக்குடி- இலங்கை பயணிகள் கப்பல் சேவை நிரந்தரமாக இயக்கப்படுமா என கேள்வி எழுப்புகின்றனர் சுற்றுலாப்பிரியர்கள். அதிக கட்டணம் , பல்வேறு கெடுபிடிகள் போன்றவையும் பயணிகள் விரும்பாத காரணம் என்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Embed widget