மேலும் அறிய

ராமநாதபுரம்: தற்கொலை செய்த காவலரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசார் சஸ்பெண்ட்

இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் தகராறு ஒன்றில் கைப்பற்றப்பட்ட நகைகளை எடுத்து விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்ட காவலரின் செல்போனை திருடி விற்பனை செய்த 2 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.தங்கதுரை உத்தரவிட்டார்.
 
ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவு காவலராக பணியாற்றி வந்தவர் அசோக்குமார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
இந்த விசாரணை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரிடம், அசோக்குமார் தற்கொலை தொடர்பான ஆவணங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் விவரங்களை கேட்டனர். அப்போது அசோக்குமாரின் செல்போன் மட்டும் மாயமானது தெரியவந்தது.
 
 இதுதொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அசோக் குமாரின் செல்போனை ஒருவர் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை பிடித்து விசாரித்த போது, ஒரு கடையில் அந்த போனை வாங்கியதாக தெரிவித்தார். அந்த கடையில் விசாரித்தபோது, ராமநாதபுரம் கேணிக்கரை காவல்  நிலையத்திலிருந்து போலீசார் இருவர் ரூ.2 ஆயிரத்திற்கு அசோக்குமாரின் செல்போனை விற்றது விசாரணையில் தெரியவந்தது. 
 

ராமநாதபுரம்: தற்கொலை செய்த காவலரின் செல்போனை திருடி விற்ற 2 போலீசார் சஸ்பெண்ட்
 
இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கடந்த 3 நாட்களாக விசாரணை மேற்கொண்டார். பணியிடை நீக்கம் விசாரணையின் முடிவில் கேணிக்கரை காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றி வரும் சுரேஷ், ஏட்டு கமலக்கண்ணன் ஆகியோர் செல்போன் திருடி விற்றது தெரியவந்ததால் வழக்குப்பதிவு செய்யவும், இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்தும் எஸ்.பி உத்தரவிட்டார். 
 
வழக்கு விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருந்த செல்போனை போலீசாரே திருடி விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் தகராறு ஒன்றில் கைப்பற்றப்பட்ட நகைகளை எடுத்து விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget