மேலும் அறிய

குப்பை கிடங்கில் பயோ டைவர்சிட்டி பார்க்கா?; சாதித்து காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி பகுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த காடு, பறவைகள், விலங்குகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான தருவைகுளம் குப்பை கிடங்கு முன்பு துர்நார்ற்றத்துடன் புகை மண்டலமாக காட்சியளித்த நிலையில் இன்று அடர் வனமாக மாறி பறவைகள், விலங்குகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது.


குப்பை கிடங்கில் பயோ டைவர்சிட்டி பார்க்கா?; சாதித்து காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு தூத்துக்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வழியில் அய்யனார்புரம் பகுதியில் அமைந்துள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கை கடந்து செல்வது என்றாலே மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டும். மேலும் இங்கிருந்து கிளம்பும் புகை கிழக்கு கடற்கரை சாலையையே மூடிவிடும். இதனால் சுற்றியுள்ள பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.


குப்பை கிடங்கில் பயோ டைவர்சிட்டி பார்க்கா?; சாதித்து காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி

இதனை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய அப்போதைய தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெயசீலன், கடந்த 2019 ஆம் ஆண்டு குப்பைக்கிடங்கில் 2 ஏக்கர் பரப்பளவில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை அகற்றி மரங்களை நட முடிவு செய்தார். 2 ஏக்கர் பரப்பளவில் 2 ஆயிரம் மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்கள் நன்கு வளரத் தொடங்கியதை தொடர்ந்து, அடுத்தடுத்து குப்பைகள் அழிக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன. இதுவரை இந்த பகுதியில் மியாவாக்கி முறையில் 130 ஏக்கரில் 1.25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.


குப்பை கிடங்கில் பயோ டைவர்சிட்டி பார்க்கா?; சாதித்து காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி

இதில் 2019-ம் ஆண்டில் நடப்பட்ட மரங்கள் சுமார் 15 அடி உயரத்துக்கு வளர்ந்து சோலையாக காட்சியளிக்கிறது. இதில் கொய்யா, மாதுளை, கொடுக்காபுளி போன்ற பழமரங்கள் பலன் கொடுக்க தொடங்கியுள்ளன. பழ மரங்கள், நிழல் தரும் மரங்கள், மரத்தடி தரும் மரங்கள், காய்கறி, பூச்செடிகள், மூலிகை செடிகள் என சுமார் 300 வகையான மரங்கள் மற்றும் செடிகள் இங்கே நடப்பட்டுள்ளன. தூத்துக்குடி பகுதியில் முன் எப்போதும் இல்லாத வகையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில் மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த காடு, பறவைகள், விலங்குகளுக்கு புகலிடமாக மாறியுள்ளது.


குப்பை கிடங்கில் பயோ டைவர்சிட்டி பார்க்கா?; சாதித்து காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மாநகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் பயோ டைவர்சிட்டி பார்க் அமைக்க மாநகராட்சி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வல்லுநர் குழு மூலம் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த பகுதியில் மரம், செடி கொடிகள் சரியாக வளராது. உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என வல்லுநர் குழுவினர் தெரிவித்தனர். ஆனால், அந்த கருத்து தவறானது என்பதை தற்போது நிருபித்திருக்கிறோம். இங்கு மரம், செடி, கொடிகள் மிக மிக நன்றாக செழித்து வளருகின்றன. அதன் மூலம் பல உயிரினங்களுக்கு இப்பகுதி புகலிடமாக மாறியுள்ளது.


குப்பை கிடங்கில் பயோ டைவர்சிட்டி பார்க்கா?; சாதித்து காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி

ஏராளமான மயில்கள் இங்கே வாழ்கின்றன. அவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஏற்ற பகுதியாக இந்த இடத்தை தேர்வு செய்துள்ளன. ஏராளமான பறவைகள் இங்கு வாழ்கின்றன. மேலும், முயல், எலி, பாம்பு போன்ற வனவிலங்குகளும், ஏராளமான சிறிய உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.மரங்கள், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க ஏதுவாக மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை உபயோகித்து வருகின்றனர்.


குப்பை கிடங்கில் பயோ டைவர்சிட்டி பார்க்கா?; சாதித்து காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் மரக்கன்று நடுவதில் மிகுந்த ஆர்வத்தோடு ஊக்கப்படுத்தியதால் வனத்துறை மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், மாணவர் சங்கங்கள். இயற்கை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் பக்கபலமாக இருந்து உதவிகளை செய்து வருகின்றனர். அனைவரின் கூட்டு முயற்சியால் தான் இந்த காட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


குப்பை கிடங்கில் பயோ டைவர்சிட்டி பார்க்கா?; சாதித்து காட்டிய தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி நகரை பசுமையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மாநகராட்சி நிர்வாகம், கடந்த ஆண்டு பொறுப்பேற்று 2-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் 70 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடு செய்தார்.இந்த ஆண்டு 3-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு 71 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை கடந்த மாதம் தொடக்கத்தில் மேயர் தொடங்கி வைத்தார். அந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அன்றைய குப்பைமேடு இன்று சோலையாக உருமாறி உள்ளது. விரைவில் பறவைகளின் வேடந்தாங்கலாக மாறும் நிலை ஏற்படும் என்பதே உண்மை.



மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?
குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?
தவெகவின் முதல் வெற்றி... திமுக கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை.. தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி
தவெகவின் முதல் வெற்றி... திமுக கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை.. தூத்துக்குடியில் விஜயின் நண்பர் ஸ்ரீநாத் வெற்றி
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: உண்மையை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி எம்.பி கடும் தாக்கு!
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: உண்மையை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி எம்.பி கடும் தாக்கு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget