தூத்துக்குடியில் நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் நாளை செவ்வாய்க்கிழமை மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சாரமானது நிறுத்தப்படும்.
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் நாளை செவ்வாய்க்கிழமை மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த நிலையில், எந்தெந்த பகுதிகளில், எவ்வளவு நேரம் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது என்ற விபரத்தை பார்க்கலாம்.
துணை மின் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடியில் நாளை சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை பல பகுதிகளில் மின்சார வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி கீழ அரசடி, மேல அரசடி, திரேஸ் நகர், சாகிர் உஷேன் நகர், டேவிஸ்புரம், ஜீவா நகர், அலங்கார தட்டு, நேரு காலனி கிழக்கு, சுனாமி நகர், வாலசமுத்திரம், குரூஸ்புரம் மற்றும் திரேஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூபாலராயர் புரம், எஸ்.எஸ். மாணிக்கபுரம், கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ணபுரம், வெற்றிவேல் புரம், சங்குகுளி காலனி, முத்தையார் காலனி, மாப்பிள்ளையூரணி, ஜோதி நகர், ஆரோக்கியபுரம், தாளமுத்து நகர், நேரு நகர், ஹவுசிங் போர்டு மற்றும் குமரன் நகர் ஆகிய பகுதிகளும் மின்தடையால் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவில்பிள்ளை விளை, வெள்ளப்பட்டி, தருவைகுளம், டி.சவேரியர்புரம், மாதா நகர், ராமர்விளை, ராஜபாளையம், சிலுவைப்பட்டி, அ.குமாரபுரம், மேலமருதூர், தளவாய்புரம், பட்டிணமருதூர், பணையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை காலை முதல் மாலை வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் தடை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள்
* மின் தடை அமலுக்கு வரும் முன் மொபைல், பவர் பேங்க் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளவும்.
* மின்சார பம்புகள் இயங்காது என்பதால் குடிநீர் மற்றும் வீட்டு நீரை போதுமான அளவில் சேமித்து வைத்திருக்கவும்.
* மின் விநியோகம் மீண்டும் தொடங்கும்போது சேதம் ஏற்படாமல் இருக்க அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிடவும்.
* மெழுகுவர்த்தி, டார்ச் அல்லது பேட்டரி விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
* மருத்துவ உபகரணங்கள் மற்றும் குளிர்விப்பு தேவைப்படும் மருந்துகளுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்னதாக செய்து கொள்ளவும்.
* மின் தடை நேரத்தில் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* அன்றாட வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, மின்சாரம் திரும்பும் வரை ஒத்துழைப்பு வழங்கவும்























