சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர் "விசிலுக்கு ஓட்டு போட்டவங்க அனுபவிக்கிறாங்க" - நயினார்
“எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் சிரித்து படம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” - அருணாசலத்தின் தாய் ஆதங்கம்

"விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள் அதன் பயனை தற்போது அனுபவித்து வருகிறார்கள்" என்று தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை சந்தித்தபின் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் அருணாசலத்தின் பெற்றோரை பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், “ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைக்கு சென்ற இளைஞரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள், காலையிலிருந்து சென்ற மகன் திரும்பவில்லை என தேடி வந்துள்ளனர். காவல்துறையினர் விசாரணையின்போது உயிரிழந்து விட்டதாக போன் செய்துள்ளனர்.
காவலர் மீது நடவடிக்கை
விசாரணையின்போது, காவல்துறையினர் தாக்கியதில் அருணாசலம் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலும் விசாரணையின்போது, விசாரணை கைதியை கொன்றுள்ளனர். தாயிடம் தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து காவல்துறை அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. காவல்துறை அடித்து கொலை செய்துள்ளது. தொடர்புடைய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணாச்சலத்தை கொலை செய்த காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஜனநாயகன் பார்ப்பதில் ஆர்வம்
விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள் அதன் பயனை தற்போது அனுபவித்து வருகிறார்கள்.
அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகம் படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர வாக்களித்த மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு அக்கறை செலுத்தவில்லை. இதனை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அப்போது இருந்த ஆட்சி மாற்றப்பட்டது தூக்கி எறியப்பட்டது. அதன் பிறகு சிவகங்கையில் காவல்துறை விசாரணையில் இளைஞர் கொல்லப்பட்டதால் அப்போதிருந்த ஆட்சியும் தூக்கி எறியப்பட்டது. இப்போது இந்த ஆட்சியில் ஆரம்பத்திலேயே காவல்துறை மரணங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை எலி கடித்துள்ளது. அந்த அளவிற்கு மருத்துவமனை வசதிகள் உள்ளன” என்று கூறினார்.
பேட்டியின்போது நயினார் நாகேந்திரன் அருகில் நின்ற அருணாசலத்தின் தாய் பரமேஸ்வரி, “எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் சிரித்து படம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்” என ஆதங்கத்துடன் கூறினார்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















