தூத்துக்குடி–நரசாபூர் சிறப்பு ரயில் இயக்கம்: செப்டம்பர் மாதம் 4 சேவைகள் – முழு விவரம் இதோ!
தூத்துக்குடி, நரசாபூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், செப்டம்பர் மாதம் 7, 14, 21, 28 ஆகிய திங்கட்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும்.

பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், Trains on Demand (TOD) திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் ஆந்திராவின் நரசாபூர் இடையே 4 சேவை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வண்டி எண் (06019) தூத்துக்குடி, நரசாபூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், செப்டம்பர் மாதம் 7, 14, 21, 28 ஆகிய திங்கட்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் நரசாபூரை மூன்றாவது நாள் அதிகாலை 12.20 மணிக்கு சென்றடையும். மொத்தம் 4 சேவைகள் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் (06020) நரசாபூர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், செப்டம்பர் மாதம் 9, 16, 23, 30 ஆகிய புதன்கிழமைகளில் நரசாபூரில் இருந்து அதிகாலை 4.00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இந்த மார்க்கத்திலும் மொத்தம் 4 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயில்கள் தூத்துக்குடி, துடிமெலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கைகலூர், அகிவிடு, பீமவரம் டவுன் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தூத்துக்குடியில் இருந்து புறப்படும் (06019) சிறப்பு ரயில், அதிகாலை 2.00 மணிக்கு மதுரை வந்தடைந்து, 2.05 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில், (06020) சிறப்பு ரயில் அதிகாலை 1.20 மணிக்கு மதுரை வந்தடைந்து, 1.25 மணிக்கு புறப்படும்.தூத்துக்குடி – நரசாபூர் இடையே சிறப்பு ரயில்கள் (southern railway)

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 1.00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைந்து, 1.15 மணிக்கு புறப்படும். அதே போல் மறுமார்க்கத்தில் நரசாபூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் ரயில், பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைந்து, 3.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில்களில், இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டி 1, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு படுத்தி வசதி பெட்டிகள் 8, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் உட்பட பொதுப் பெட்டிகள் 5, சரக்கு பெட்டிகள் இரண்டு 2 என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 22) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள், தூத்துக்குடி, மதுரை, திருச்சி டெல்டா மாவட்டங்கள், சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















