மேலும் அறிய

பருவமழை தொடங்கியதால் முடிவுக்கு வந்த உப்பு சீசன் - இந்தாண்டில் மட்டும் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி

’’உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணையை இந்த ஆண்டே வெளியிட உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை’’

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு சீசன் முடிவுக்கு வந்துள்ளது. 

 
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இந்த உப்பளங்களை நம்பி சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி பணிகள் நடந்து வருகிறது. இங்கு  ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதங்கள் தான் உப்பு உற்பத்தி மிக அதிகமாக நடைபெறும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவுக்கு வரும்.
 
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குறித்த காலத்தில் உப்பு உற்பத்தி தொடங்கவில்லை. மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகே உப்பு உற்பத்தி தொடங்கியது.அது போல மே மாதத்தில் 2 வாரங்கள் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக 15 நாட்களுக்கு மேலாக உப்பு உற்பத்தி நடைபெறவில்லை.

                                   பருவமழை தொடங்கியதால் முடிவுக்கு வந்த உப்பு சீசன் - இந்தாண்டில் மட்டும் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி
 
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீசன் முடிவுக்கு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக உப்பளங்கள் அனைத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து டிசம்பர் மாத இறுதி வரை வடகிழக்கு பருவமழை இருக்கும் என்பதால் இந்த காலத்தில் உப்பு உற்பத்தி நடைபெறாது. இதையடுத்து உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டிக் ஷீட்டுகளை போட்டும், தென்னங் கீற்றுகளாலும் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

                                   பருவமழை தொடங்கியதால் முடிவுக்கு வந்த உப்பு சீசன் - இந்தாண்டில் மட்டும் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி
 
இது குறித்து தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் பெய்த மழை காரணமாக உப்பு உற்பத்தி குறைந்துள்ளது. பெரிய அளவிலான உப்பளங்களில் 65 சதவீதம் அளவுக்கு தான் உற்பத்தி நடந்துள்ளது. சில சிறிய உப்பளங்களில் 70 சதவீதம் வரை உற்பத்தி நடைபெற்றுள்ளது. மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 17 லட்சம் டன் அளவுக்கு உப்பு உற்பத்தியாகி உள்ளது. இதில் இதுவரை 50 சதவீத உப்பு விற்பனையாகி விட்டது. 50 சதவீத உப்பு கையிருப்பில் உள்ளது. இது வரும் ஜனவரி மாதம் கடைசி வரை போதுமானதாக இருக்கும். இந்த ஆண்டு உப்புக்கு நல்ல விலை கிடைக்கிறது. தற்போது ஒரு டன் உப்பு 2700 ரூபாய் வரை விலை போகிறது. உப்பு உற்பத்தி குறைந்தாலும் விலை ஓரளவுக்கு நன்றாக இருப்பதால் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டு நஷ்டம் ஏதும் இல்லை என்றனர்.

                                   பருவமழை தொடங்கியதால் முடிவுக்கு வந்த உப்பு சீசன் - இந்தாண்டில் மட்டும் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி
 
உப்பள தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மழை காலத்தில் வேலை இல்லாததால் பெரிதும் வாழ்வாதாரமின்றி தவித்து வந்தனர், தங்களுக்கு மழைக்கால நிவாரணம் வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு உப்பள தொழிலாளர்களுக்கு மழை கால நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து இருப்பது தொழிலாளர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது, இருந்த போதிலும் நிவாரணம் வழங்குவது தொடர்பான அரசாணையை வெளியிட்டு இந்தாண்டே உப்பள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் உப்பள தொழிலாளர்கள்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget