மேலும் அறிய

ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணிகள்; மாநகராட்சிக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை -தூத்துக்குடி மேயர்

திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை வருவதால், பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கி செல்ல அனைத்து வசதிகளுடன் ஓய்வுக்கூடம் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் ஜெகன் தலைமையில் நடந்தது ஆணையர் சாருஸ்ரீ துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேயர் ஜெகன் சிறப்பு தீர்மானத்தை அறிவித்தார். தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. முத்துநகர் பூங்காவில் உள்ள கடைகளுக்கு டெண்டர் விடும் தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 28 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணிகள்; மாநகராட்சிக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை -தூத்துக்குடி மேயர்

கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். திருச்செந்தூர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். குறிப்பாக கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம் போன்ற விழா நேரங்களில் பாதயாத்திரை பக்தர்கள் அதிகம் செல்கின்றனர். மதுரைக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். திருச்செந்தூருக்கு 10 லட்சம் பக்தர்கள் வந்தால் அதில் 5 லட்சம் பேர் தூத்துக்குடி வழியாக தான் செல்கின்றனர்.


ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணிகள்; மாநகராட்சிக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை -தூத்துக்குடி மேயர்

இந்த பாதயாத்திரை பக்தர்கள் இரவு நேரத்தில் நடப்பதில்லை. சாலை ஓரங்களில் ஓய்வெடுப்பார்கள். அவர்களது வசதிக்காக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஓய்வுக்கூடம் ஒன்று அமைக்கப்படும். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் ரவுண்டானா பகுதியில் உப்பாறு ஓடையை ஒட்டி மாநகராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பாதயாத்திரை பக்தர்கள் இரவு நேரங்களில் தங்கி செல்ல அனைத்து வசதிகளுடன் ஓய்வுக்கூடம் அமைக்கப்படும். இங்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை, குளியலறை, மின் விளக்குகள், போலீஸ் பாதுகாப்பு போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்படும். மேலும், அருகே உப்பாற்று ஓடை அமைந்துள்ளதால் பூங்காவும் ஏற்படுத்தப்படும் என்றார் மேயர்.


ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணிகள்; மாநகராட்சிக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை -தூத்துக்குடி மேயர் 

தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறும்போது, ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணிகள் 2019-ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட பணியாகும். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை தேர்வு செய்ய ஒரு குழு உள்ளது. அந்த குழு தேர்வு செய்து தான் இந்த பணி நடைபெறுகிறது. ஆஷ் நினைவு மண்டபம் 1911-ம் ஆண்டு கட்டப்பட்டது. மாநகராட்சி பகுதியில் உள்ள பூங்காக்களை பராமரிக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை. அந்த வகையில் தான் அங்கு சில பணிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து சிலர் அரசியல் காழ்புணர்ச்சியோடும், முழுமையான உண்மை தெரியாமலும்  வேண்டுமென்றே தவறான கருத்துக்களை பரப்பி விடுகின்றனர். தொடர்ந்து இதுபோன்று மாநகராட்சிக்கு எதிராக அவதூறு பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணிகள்; மாநகராட்சிக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை -தூத்துக்குடி மேயர்

பாலித்தீன் பைகள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதுதொடர்பாக மாமன்ற உறுப்பினர்களும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சி சார்பில் 5 லட்சம் மஞ்ச பைகள் தயாரிக்கப்பட்டு, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாசு இல்லா நகரமாக தூத்துக்குடியை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.


ஆஷ் நினைவு மண்டப புனரமைப்பு பணிகள்; மாநகராட்சிக்கு எதிராக அவதூறு பரப்பினால் நடவடிக்கை -தூத்துக்குடி மேயர்

மாநகராட்சி பகுதியில் தனியார் இடங்களில் உள்ள கருவேல மரங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்தால் தூத்துக்குடியில் மழைநீர் தேங்காது என்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களுக்கும் தலா மூன்று மஞ்சள் பைகள் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget