மேலும் அறிய

பருத்திக்கு மாறிய திருவாரூர் விவசாயிகள்...! - இதுவரை 40,000 குவிண்டால் பருத்தி கொள்முதல்...!

’’ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து பருத்து சாகுபடியில் ஈடுபட்ட நிலையில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 8,700 ரூபாய்க்கு விற்பனை’’

டெல்டா மாவட்டங்களில் பிரதான சாகுபடி நெல் சாகுபடி ஆகும். ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினை காரணமாக மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீர் போதிய அளவு வராத காரணத்தினால் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்தது. மேலும் நெல் சாகுபடியை தவிர்த்து குறைந்த அளவு தண்ணீரில் செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். குறிப்பாக பணப் பயிரான பருத்தி சாகுபடியில் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

பருத்திக்கு மாறிய திருவாரூர் விவசாயிகள்...! - இதுவரை 40,000 குவிண்டால் பருத்தி கொள்முதல்...!
ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் துறை வழங்கிய ஆலோசனையின்படி பணப் பயிரான பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். மேலும் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீரின் அளவைவிட குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டால் மூன்று அறுவடை செய்து  விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மூங்கில்குடி, குடவாசல், வலங்கைமான் ஆகிய நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை விற்பனை செய்து வருவது வழக்கம்.
 
அதனையொட்டி இந்த ஆண்டு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை தற்போது அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு குவிண்டால் 8700 ரூபாய் வரை அதிகபட்சமாக விலை போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரை 15 வாரங்கள் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் குவிண்டாலுக்கு மேல் மேல் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில்முருகன் தெரிவித்தார்.

பருத்திக்கு மாறிய திருவாரூர் விவசாயிகள்...! - இதுவரை 40,000 குவிண்டால் பருத்தி கொள்முதல்...!
 
பருத்தி பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டுக்காண்டு பருத்தி விலை பிரச்சினை காரணமாக தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்கின்றனர். ஆகையால் விவசாயிகள் தாங்கள் செய்த செலவு பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பருத்தி நல்ல முறையில் விளைச்சல் கண்டுள்ளது. அதேநேரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் அதிக விலைக்கு விற்பனையாகி வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆண்டுதோறும் இதேபோன்று பருத்திக்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய ஒன்றாக அமையும் என தெரிவித்தனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget