மேலும் அறிய

பருத்திக்கு மாறிய திருவாரூர் விவசாயிகள்...! - இதுவரை 40,000 குவிண்டால் பருத்தி கொள்முதல்...!

’’ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து பருத்து சாகுபடியில் ஈடுபட்ட நிலையில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 8,700 ரூபாய்க்கு விற்பனை’’

டெல்டா மாவட்டங்களில் பிரதான சாகுபடி நெல் சாகுபடி ஆகும். ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினை காரணமாக மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீர் போதிய அளவு வராத காரணத்தினால் உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வந்தது. மேலும் நெல் சாகுபடியை தவிர்த்து குறைந்த அளவு தண்ணீரில் செய்யக்கூடிய சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். குறிப்பாக பணப் பயிரான பருத்தி சாகுபடியில் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

பருத்திக்கு மாறிய திருவாரூர் விவசாயிகள்...! - இதுவரை 40,000 குவிண்டால் பருத்தி கொள்முதல்...!
ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் துறை வழங்கிய ஆலோசனையின்படி பணப் பயிரான பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். மேலும் நெல் சாகுபடிக்கு தேவையான தண்ணீரின் அளவைவிட குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டால் மூன்று அறுவடை செய்து  விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மூங்கில்குடி, குடவாசல், வலங்கைமான் ஆகிய நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை விற்பனை செய்து வருவது வழக்கம்.
 
அதனையொட்டி இந்த ஆண்டு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட பருத்தியை தற்போது அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஒரு குவிண்டால் 8700 ரூபாய் வரை அதிகபட்சமாக விலை போயிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் இதுவரை 15 வாரங்கள் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் 40 ஆயிரம் குவிண்டாலுக்கு மேல் மேல் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக செந்தில்முருகன் தெரிவித்தார்.

பருத்திக்கு மாறிய திருவாரூர் விவசாயிகள்...! - இதுவரை 40,000 குவிண்டால் பருத்தி கொள்முதல்...!
 
பருத்தி பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், தண்ணீர் பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி பணிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். ஆண்டுக்காண்டு பருத்தி விலை பிரச்சினை காரணமாக தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை கொள்முதல் செய்கின்றனர். ஆகையால் விவசாயிகள் தாங்கள் செய்த செலவு பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. ஆனால் இந்த ஆண்டு பருத்தி நல்ல முறையில் விளைச்சல் கண்டுள்ளது. அதேநேரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் அதிக விலைக்கு விற்பனையாகி வருவது மகிழ்ச்சி தருகிறது. ஆண்டுதோறும் இதேபோன்று பருத்திக்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு பயனளிக்கக்கூடிய ஒன்றாக அமையும் என தெரிவித்தனர். 

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
சட்டமன்றம் சந்தைக்கடை: முதல்வரை கடுமையாக சாடிய செல்லூர் ராஜு!
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
CM Vijay: கையை காட்டிய முதலமைச்சர்.. விஜய்யைப் பார்க்க ஓடோடி வந்த பெண்கள் - வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget