மேலும் அறிய

டிசம்பரில் பெய்த திடீர் கனமழையால் மகசூல் வீழ்ச்சி - ஏக்கருக்கு 15 மூட்டைகளே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை

’’குறுவை அறுவடையின்போது பெய்த கனமழையால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சம்பா அறுவடையின் போது மழையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை’’

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினாலும், பருவமழை போதிய அளவு பெய்யாத காரணத்தினால் மூன்று போகம் சாகுபடி என்பது ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீண்டும் மூன்று போக சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணத்தினால் தற்பொழுது சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


டிசம்பரில் பெய்த திடீர் கனமழையால் மகசூல் வீழ்ச்சி - ஏக்கருக்கு 15 மூட்டைகளே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 லட்சத்து 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடி என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரத்து 160 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் சம்பா, தாளடி நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் உரங்கள் தட்டுப்பாடு காரணமாக நெல் மணிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மீண்டும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நெல் பயிர்களில் சாய்ந்து மீண்டும் பாதிக்கப்பட்டன.


டிசம்பரில் பெய்த திடீர் கனமழையால் மகசூல் வீழ்ச்சி - ஏக்கருக்கு 15 மூட்டைகளே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை

பல இடங்களில் வயல்களில் தேங்கிய மழைநீரில் பயிர்கள் சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறுவை அறுவடையின்போது பெய்த கனமழையால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சம்பா அறுவடையின் போது மழையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள் இந்த சூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ளது ஆனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஏக்கருக்கு 30 மூட்டை நெல் மகசூல் கிடைக்க வேண்டிய இடத்தில் 15 முதல் 18 மூட்டைகள் கிடைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழை காரணமாக கூடுதலாக செலவு செய்து சாகுபடி பணிகளை மேற்கொண்டோம் ஆனால் தற்போது மகசூலில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவே அரசு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget