மேலும் அறிய

உலக மண் தினம்: தஞ்சையில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

’’விவசாயிகளை கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் துாங்கி வருவதை சுட்டிக்காட்டும் விதமாக, விவசாயிகள் துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்’’

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மாரநேரி கிராமத்தில் அய்யனார் ஏரிய உள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி சுமார் 1400 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இந்த அய்யனார் ஏரி,  ஆனந்தகாவிரி வாய்க்கால் பாசன பகுதி மற்றும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளாகும். நீர் வழிப்பாதைகள், நீர் வெளியேறும் பாதைகள் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்டதால், ஆறுகளில் தண்ணீர் வந்தாலும், அய்யனார் ஏரி நிரம்பாத நிலையானது.இது குறித்து ஆக்கிரமிக்கப்பட்டவர்களிடம் கேட்கும், உரிய பதில் கூறாமலும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியப்படுத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும், ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமலும், அதற்குண்டான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

மேலும் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டும் குறைந்ததால், அப்பகுதியுள்ள பெரும்பாலான ஆழ்குழாய் மோட்டாரில்  தண்ணீர் வராமல் போனது.இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக , மாரநேரியிலுள்ள  188 ஏக்கர் பரப்பளவில் உள்ள அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்டில் தொடர்ந்த வழக்கில், சுமார் 114 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரிந்த நீதிபதிகள் அய்யனார் ஏரியில் ஆக்கிரமித்துள்ள 125 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‌வருவாய் துறை, காவல்துறை உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



உலக மண் தினம்: தஞ்சையில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  ஆனால், தமிழக அரசால் பூமி தானம் மற்றும் தியாகிகளுக்கு வழங்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி 71 குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொள்ள பொதுப்பணித்துறை நீதிமன்றத்தில் தகவல்களை தராமல் வேண்டுமென்றே கையூட்டு பெற்றுக்கொண்டு அரசு வழங்கிய நிலத்தை அபகரித்தது, விவசாயிகளை தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். கோர்ட்டில் அவதுாறாக கொடுத்த தவறான தகவலையடுத்த பொதுப்பணித்துறை வருவாய்த்துறையை கண்டித்து சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். தினந்தோறும் ஒவ்வொரு விதமாக நுாதன போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் துாங்கி வருவதை சுட்டிக்காட்டும் விதமாக, விவசாயிகள் துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


உலக மண் தினம்: தஞ்சையில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் என்வி கண்ணன்,  மாவட்ட குழு உறுப்பினர் காந்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர்  உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.போராட்ட குழுவினர், கூறுகையில், இந்த நிலங்கள் தியாகிகளுக்கு வழங்கிய பட்டா,  பூமி தான இயக்கம் மூலம்  வழங்கிய பட்டா மற்றும்   தலித், ஏழை விவசாயிகளுக்கு தானமாக  அரசு வழங்கிய நிலம். இவை அனைத்தையும் மறைத்து எங்களை  அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தந்த வருவாய்துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினரை கண்டித்தே உலக மண் தினத்தை முன்னிட்டு  அரசு வழங்கிய நிலத்தை விவசாய மண்ணை மீட்க தூங்கும் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளோம் என்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
"கர்ம வினையின் கணக்குப்பிள்ளை: பாசக்கயிறோடு தீர்ப்பெழுதும் காலதேவன்!"
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget