மேலும் அறிய

உலக மண் தினம்: தஞ்சையில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

’’விவசாயிகளை கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் துாங்கி வருவதை சுட்டிக்காட்டும் விதமாக, விவசாயிகள் துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்’’

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மாரநேரி கிராமத்தில் அய்யனார் ஏரிய உள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி சுமார் 1400 ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இந்த அய்யனார் ஏரி,  ஆனந்தகாவிரி வாய்க்கால் பாசன பகுதி மற்றும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளாகும். நீர் வழிப்பாதைகள், நீர் வெளியேறும் பாதைகள் அனைத்து ஆக்கிரமிக்கப்பட்டதால், ஆறுகளில் தண்ணீர் வந்தாலும், அய்யனார் ஏரி நிரம்பாத நிலையானது.இது குறித்து ஆக்கிரமிக்கப்பட்டவர்களிடம் கேட்கும், உரிய பதில் கூறாமலும், ஆக்கிரமிப்பை அகற்றாமல் அலட்சியப்படுத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை வைத்தும், ஏரியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமலும், அதற்குண்டான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

மேலும் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், நிலத்தடி நீர் மட்டும் குறைந்ததால், அப்பகுதியுள்ள பெரும்பாலான ஆழ்குழாய் மோட்டாரில்  தண்ணீர் வராமல் போனது.இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக , மாரநேரியிலுள்ள  188 ஏக்கர் பரப்பளவில் உள்ள அய்யனார் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர் மதுரை ஐகோர்டில் தொடர்ந்த வழக்கில், சுமார் 114 ஏக்கர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரிந்த நீதிபதிகள் அய்யனார் ஏரியில் ஆக்கிரமித்துள்ள 125 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‌வருவாய் துறை, காவல்துறை உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



உலக மண் தினம்: தஞ்சையில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

அதன் படி கடந்த செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.  ஆனால், தமிழக அரசால் பூமி தானம் மற்றும் தியாகிகளுக்கு வழங்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி 71 குடும்பங்களின் நலனையும் கருத்தில் கொள்ள பொதுப்பணித்துறை நீதிமன்றத்தில் தகவல்களை தராமல் வேண்டுமென்றே கையூட்டு பெற்றுக்கொண்டு அரசு வழங்கிய நிலத்தை அபகரித்தது, விவசாயிகளை தியாகிகளை அவமானப்படுத்துவதாகும். கோர்ட்டில் அவதுாறாக கொடுத்த தவறான தகவலையடுத்த பொதுப்பணித்துறை வருவாய்த்துறையை கண்டித்து சாகும் வரை தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். தினந்தோறும் ஒவ்வொரு விதமாக நுாதன போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் துாங்கி வருவதை சுட்டிக்காட்டும் விதமாக, விவசாயிகள் துாங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


உலக மண் தினம்: தஞ்சையில் தூங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் என்வி கண்ணன்,  மாவட்ட குழு உறுப்பினர் காந்தி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர்  உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்தனர்.போராட்ட குழுவினர், கூறுகையில், இந்த நிலங்கள் தியாகிகளுக்கு வழங்கிய பட்டா,  பூமி தான இயக்கம் மூலம்  வழங்கிய பட்டா மற்றும்   தலித், ஏழை விவசாயிகளுக்கு தானமாக  அரசு வழங்கிய நிலம். இவை அனைத்தையும் மறைத்து எங்களை  அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தந்த வருவாய்துறையினர் மற்றும் பொதுப்பணி துறையினரை கண்டித்தே உலக மண் தினத்தை முன்னிட்டு  அரசு வழங்கிய நிலத்தை விவசாய மண்ணை மீட்க தூங்கும் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளோம் என்றனர்

தலைப்பு செய்திகள்

ரூ.150 கோடி இழப்பு... நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: தவிக்கும் தஞ்சை விவசாயிகள்
ரூ.150 கோடி இழப்பு... நெல் கொள்முதலில் தொடரும் லஞ்சம்: தவிக்கும் தஞ்சை விவசாயிகள்
பாலைவனமாகும் வயல்கள்... கண்ணீர் விட்டு கதறும் தஞ்சாவூர் விவசாயிகள்
பாலைவனமாகும் வயல்கள்... கண்ணீர் விட்டு கதறும் தஞ்சாவூர் விவசாயிகள்
தஞ்சை மாவட்டமே அதிர்ந்தது... கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்டமே அதிர்ந்தது... கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்
காட்சி பொருளாக மாறிய போக்குவரத்து சிக்னல்கள்: தஞ்சையில் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்
காட்சி பொருளாக மாறிய போக்குவரத்து சிக்னல்கள்: தஞ்சையில் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget