மேலும் அறிய

”நிற்கச்சொன்னா நிக்கும், அன்புதான் மொழி” : ஆடுகளை வளர்த்து அரவணைக்கும் ஆசிரியர்..

வாசுவை பார்த்தால் நமக்கு உணவு கிடைக்கும் என்ற நோக்கத்தில் தினமும் வாசுவின் வீட்டைத்தேடி 2  ஆடுகளும் வரத்தொடங்கியது.

ஆடுகளின் நண்பனாக வலம்வரும் திருவாரூர் வாசு. வாசுவை பார்த்தால் நமக்கு உணவு கிடைக்கும் என்ற நோக்கத்தில் ஆடுகளும் வரத்தொடங்கியது.

உலகத்தில் தோன்றிய மனிதர்களின்  மனங்களை இணைப்பதற்கு முக்கியத் தேவையாக இருப்பது மொழி. அந்த மொழிகளிலும் தன்னுடையது பெரியது ஒரு மொழிக்காரர்களும், மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதும், மொழி ஆர்வலர்கள் விரக்தி கொள்வதும், அன்றாடம் நிகழ்கின்ற ஒன்று. ஆனால் உலக உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவான மொழி அன்புதான்.  இந்த மொழியின் வளர்ச்சியானது மற்ற உயிரிணங்களின் மேல் ஆதிக்கம் செலுத்த,செலுத்த வளர்கின்ற ஆற்றலையும் அற்புதத்தையும் வெளிப்படுத்துகின்ற தன்மைகொண்டது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. அதனை மெய்ப்பிக்கும் வகையில்தான் விலங்கினங்கள் பலவும் மனிதனின் அன்புக்கும் அரவணைப்புக்கும் அடிபணிகின்றன. அப்படி திருவாருரில் அன்பு மொழி பேசி ஆடுகளை அரவணைத்து வைத்துள்ளார் ஒரு பகுதி நேர ஆசிரியர்.

”நிற்கச்சொன்னா நிக்கும், அன்புதான் மொழி” : ஆடுகளை வளர்த்து அரவணைக்கும் ஆசிரியர்..
திருவாரூர் காட்டுக்காரத் தெருவை சேர்ந்தவர் வாசு (54). இவர் ஓரு பட்டதாரி வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகின்றார்.  கிராம சூழலில் வளர்ந்தவர் என்பதால் கால்நடைகள் மீது பற்று கொண்டவர். திருவாரூர் நகரப்பகுதியில் வசிப்பதால்  கால்நடைகளை தங்கள் வீட்டில் வளர்க்க வசதியில்லை. அதனால் தனது வீட்டுப் பகுதியில் தெருவில் மேய்ந்துகொண்டிருக்கின்ற கால்நடைகளை பரிவோடு தடவிக்கொடுப்பதும், அவற்றுக்கு இலை தழைகளை உடைத்துபோடுவதுமாக வாசு தனது ஆசையை பூர்த்தி செய்தார். குறிப்பாக இரண்டு ஆடுகள் வீட்டின் அருகே மேய்ந்தபோது அதற்கு இழை தழைகளை உடைத்துபோட்டார். தினமும் வாசுவை பார்த்தால் நமக்கு உணவு கிடைக்கும் என்ற நோக்கத்தில் தினமும் வாசுவின் வீட்டை தேடி 2  ஆடுகளும் வரத்தொடங்கின. அந்த இரண்டு ஆடுகளின்பின் ஒன்றன்பின் ஒன்றாக வரத்தொடங்கி  இன்று 40 ஆடுகள் தினமும் காலை வேளைகளில் உணவுத் தேவைக்காகவும், வாசுவின் அன்பான உபசரிப்புக்காகவும் வரத்தொடங்கிவிட்டன.


”நிற்கச்சொன்னா நிக்கும், அன்புதான் மொழி” : ஆடுகளை வளர்த்து அரவணைக்கும் ஆசிரியர்..

அந்த ஆடுகள் வாசுவிடம் மகுடிக்கு மயங்கிய பாம்புகள்போல அவர் சொல்கின்ற அனைத்தையும் செய்கின்றன. வா என்றால் வருவதும், முட்டு என்றவுடன்  முட்டுவதையும், அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். வாசுவின் மனைவி ஜெயந்தி, மகன் ஸ்ரீராம் ஆகியோர் முதலில் இதனைத் தொல்லையாக கருதியபோதும், இந்த ஆடுகளும், வாசுவும் மனதளவில் அன்பால் ஒன்றுபட்டு நிற்பதை பார்த்து அவர்களும் இந்த அன்புக்கு அடிமையாகிவிட்டனர். தான் டியூசன் எடுக்கும் நேரம்போக மீதமுள்ள நேரங்களில் வருகின்ற ஆடுகளுக்கு இலை,தழைகளை சேகரிப்பதை அன்றாடப்பணிகளில் ஒன்றாக செய்து வருகின்ற வாசுவுக்கு தெரிந்ததெல்லாம் அன்பு மொழிதான். அதனை கொண்டுதான் ஆடுகளின் நண்பராகிவிட்டார் வாசு. இவரைப்போல நாமும் ஜீவராசிகளிடத்தில் அன்பு செலுத்துவோம். உயிரினங்களை போற்றுவோம்.

தலைப்பு செய்திகள்

தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
தஞ்சையில் மின்னொளி கால்பந்து திருவிழா: கேரள போலீஸ் அணிக்கு சாம்பியன் பட்டம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
வெயில், மழையிலிருந்து பயணிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு: பூதலூரில் உயர் மட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் மும்முரம்
மக்களை ஏமாற்றும் செயல்... தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் எதற்காக?
மக்களை ஏமாற்றும் செயல்... தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் எதற்காக?

வீடியோ

வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்
வங்கி மேனேஜர் கன்னத்தில் பளார் மு.க.அழகிரி மகள் ஆவேசம்! வெளியான வீடியோ காட்சி!
BAN NEET vs FAIR NEET..மாணவர்களிடையே பிளவு?கைவிடுவதா? தொடர்வதா? குழப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Embed widget