மேலும் அறிய

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளமானது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் அனுப்பி வைக்கிறது.

தஞ்சாவூர்: 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தீபாவளியை கொண்டாட அக்டோபர் மாத சம்பளத்தை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தீபாவளிக்கு முன்பாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு, அக்டோபர் மாத சம்பளத்தை வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டுகிறோம் :

13 ஆண்டாக பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்த அக்டோபர் மாத சம்பளம் 12,500 ரூபாயை தீபாவளிக்கு முன்னதாக கிடைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டால் மட்டுமே நடக்கும். பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளமானது ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் அனுப்பி வைக்கிறது.

பின்னர் மாவட்ட அலுவலகங்கள் அதனை  5 ந் தேதிக்குள் நேரிடையாக பகுதிநேர ஆசிரியர்களின் வங்கி கணக்கில் சம்பளத்தை பட்டுவாடா செய்கிறது. இதில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் அலுவலகம் மூலமாக 10 ஆயிரம் ரூபாய் மற்றும் தமிழ்நாடு அரசு மூலமாக 2,500 ரூபாய் என இரண்டு பரிவர்த்தனையாக பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரே தேதியில் மொத்தமாக 12,500 ரூபாயும் கிடைப்பதில்லை. மேலும் தாமதமும்  ஆகிவிடுகிறது. இந்த தீபாவளி நேரத்தில் 12,500 ரூபாய் சம்பளத்தை மொத்தமாகவும், விரைவாகவும் வழங்க வேண்டும் என முதல்வருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கிறோம். 

தற்போது அக்டோபர் 31 தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை, தொடர்ந்து அடுத்த நாள் நவம்பர் 1-ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் சம்பளத்தை முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வரின் நல்ல முடிவை எதிர்பார்த்து காத்துள்ளோம். குறைவான சம்பளத்தில் மாணவர்களின் கல்வியின் தரம் உயர பகுதிநேர ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினரும் இந்த தீபாவளியை உற்சாகமாக கொண்டாட வேண்டும். இதற்கு கருணையுள்ளத்துடன் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே தமிழக முதல்வர் தீபாவளிக்கு முன்பாக அக்டோபர் மாத சம்பளத்தை பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கினால் அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாட இயலும். திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து இந்த  தீபாவளியை மகிழ்ச்சியான தீபாவளியாக மாற்ற வேண்டும் என்று வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Questions Stalin: யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
யார் அந்த சூப்பர் முதல்வர்.? முதலமைச்சருக்கு அண்ணாமலை மூன்று கேள்விகள்...
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
சிபிஎஸ்இ படித்தால் அரசு வேலை கேட்காதீர்கள்- உயர்நீதிமன்றம் காட்டம்: எதற்காக இப்படி சொன்னது?
TVK in Trouble: ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
ஆட்சியை பிடிக்கும் முன்பே நிர்வாகிகள் அட்ராசிட்டியா.! என்ன நடக்கிறது தவெகவில்.?! சரி செய்வாரா விஜய்.?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும்  இத்தனை ஆயிரம் கோடியா ?
கனட தொழிலதிபருடன் செட்டிலான நடிகை ரம்பா..படமே நடிக்கல சொத்து மட்டும் இத்தனை ஆயிரம் கோடியா ?
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
IPL 2025: ஐபிஎல் போட்டிகளில் இதற்கு தடை! மத்திய அரசே நேரடியாக போட்ட உத்தரவு!
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
Minister ponmudi: இந்தி மொழியை படிக்கலாம் தவறில்லை... ஆனால்! பொன்முடி பேசியது என்ன?
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
TCS New Campus : ஒரே நேரத்தில் 25,000 பேர்... சென்னையில் மாஸ் காட்டும் TCS.. காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்...
Rohit Sharma:
Rohit Sharma: "இன்னும் ஒன்னு மட்டும் பாக்கி இருக்கு.." ஒருநாள் போட்டிகளில் ரோகித் சர்மா ஓய்வு பெற மறுத்தது ஏன்?
Embed widget