![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
TNPSC Free Coaching: குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: பிப்-14-ல் தொடக்கம்; எங்கே? பதிய நாளையே கடைசி!
குரூப்-4 பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு தஞ்சாவூரில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரத்தினை இங்கே காணலாம்.
![TNPSC Free Coaching: குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: பிப்-14-ல் தொடக்கம்; எங்கே? பதிய நாளையே கடைசி! TNPSC Free Coaching for Group 4 Exam Classes Starts from Feb 14 in Thanjavur know How to participate TNPSC Free Coaching: குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி: பிப்-14-ல் தொடக்கம்; எங்கே? பதிய நாளையே கடைசி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/12/8ce570017399c8a14a3a3f20283a70d41707731885520333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டி.என்.பி.எஸ்.இ. நடத்தும் குரூப்-4 பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வரும் 14- தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அறிவித்த குரூப்-4 பணிகளுக்கான தேர்வு வரும் ஜூன் மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு விவரங்கள்
கிராம நிர்வாக அலுவலர்கள், 8 துறைகளில் காலியாக உள்ள ஜுனியர் அசிஸ்டண்ட், டைபிஸ்ட், தனி உதவியாளர், பில் கலெக்டர், வன பாதுகாப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் என பல்வேறு பிரிவுகளில் காலியாக 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
தேர்வானது ஜுன் மாதம் 9ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வினாத்தாளனது 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக உருவாக்கப்படும். அதில் பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும். பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதாவது 200 கேள்விகள் மூலம் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது.
https://www.tnpsc.gov.in/ - என்ற இணையதள முகவரியில் வரும் 28-ம் தேதி (28.02.2024) இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தஞ்சாவூரில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்ட அறிவிப்பின் விவரம்.
டி.என்.பி.எஸ்.இ. குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு வரும் 14-ந் தேதி தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
இந்த வகுப்பு காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் மட்டும் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள், வரும் 13-ம் தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து பதிவு செய்வது அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய 04362-237037 என்ற தொலை பேசி எண்ணில் அலுவலக வேலைநாட்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வாசிக்க..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)