மேலும் அறிய

திருவாரூர்: அதிக மின்கட்டணம் குறித்த புகாரில் அலட்சியம்; மின் வாரியத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

ராஜ்குமார் தனது வீட்டில் மின் கட்டணம் திடீரென உயர்ந்தது குறித்து மின்வாரிய ஊழியரிடம் வாய்மொழியாக சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் தெரிவித்துள்ளார்.

திருவாரூர்: திடீரென அதிக மின்கட்டணம் வந்தது குறித்த புகாரில் அலட்சியம் காட்டிய மின்சார வாரியத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் நெடுங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான மனையில் வீடு கட்டுவதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு மின் இணைப்பு பெற்றுள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சராசரியாக 400 யூனிட் இருந்த மின் அளவு கடந்த 20.05.2020 ஆம் தேதி 720 யூனிட் என கணக்கு எடுக்கப்பட்டிருந்தது என்றும் 2021ல் பயனீட்டு அளவானது 500 என குறைத்து காணப்பட்டு அதன் பின் 740 என்றும் அதன் பின் 840 என்றும் கட்சியாக 21.09.2022 ம் தேதி தேதியில் 770 யூனிட் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் ராஜ்குமார் தனது வீட்டில் மின் கட்டணம் திடீரென உயர்ந்தது குறித்து மின்வாரிய ஊழியரிடம் வாய்மொழியாக சுமார் ஒரு ஆண்டுக்கு மேல் தெரிவித்துள்ளார் என்றும் ஆனால் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்து கடந்த 03.10.2022 ஆம் தேதி அடியக்கமங்கலத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தில் பணிபுரியும் இளநிலைப் பொறியாளருக்கு பதிவு தபால் மூலம் புகார் அளித்தும் எவ்வித பதிலும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருவாரூர்: அதிக மின்கட்டணம்  குறித்த புகாரில் அலட்சியம்; மின் வாரியத்துக்கு  ரூ.10 ஆயிரம்  அபராதம்
 
மேலும் ராஜ்குமார் வீட்டின் மின் அளவு 14074.5 என்று உள்ளது என்றும் ஆனால் கடந்த 21.09.2022 ம் தேதி மின்வாரிய பணியாளர் ராஜ்குமார் வீட்டிற்கு வந்து கணக்கீட்டு அட்டையில் எழுதிய ரீடிங் அளவு 15090 உள்ளது என்றும் அதற்கான மின் கட்டணம் தொகை 3901 என காட்டியுள்ளார் என்றும் இது குறித்து மின்மீட்டரில் தவறு உள்ளது என்று பலமுறை புகார் தெரிவித்தும் அதன் மேல் அதிகாரிகள் நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 10.12.2017 ல் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ராஜ்குமார் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
 
இந்த புகாரில் மின்வாரிய பணியாளர் மின் அளவு குறிக்க வரும்போதெல்லாம ராஜ்குமார் தன் வீட்டில் அதிக மின் அளவு பயன்படுத்தியதாக காட்டுகிறது என்று தெரியப்படுத்தியும் மின்சார வாரியத்தால் மீட்டரில் சரியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது சேவை குறைபாடு எனவும் மேலும் அவரது  வீட்டில் மின் மீட்டரில் கடந்த 21.09.2022ம் தேதி அவரது வீட்டுக்கு வந்து கணக்கீட்டு அட்டையில் மின் அளவு 15090 குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ராஜ்குமார் அவருடன் இருந்தும் அதில் குறிப்பிட்டுள்ள தொகையை அவர்  செலுத்தி உள்ளதால் அவரது மின் மீட்டர் அதன் பின்பு பழுதாகி இருக்கும் எனவும் கணக்கிட்டு பணியாளர் ராஜ்குமாரின் வாய்மொழியான புகார் குறித்து அவரது மேல் அதிகாரியிடம் தெரிவித்து இருந்தால் மின்னலவு குறித்து எந்த ஒரு தவறும் அல்லது மின்மீட்டரில் ஏற்பட்ட பிரச்சினை முன்கூட்டியே சரி செய்ய வாய்ப்புள்ளது எனவும் மின்கணக்கிலும் பணியாளர் செய்த தவறுக்கு  திருவாரூர் மாவட்ட துர்காலயா ரோடு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கண்காணிப்பு பொறியாளர் மற்றும் அடியக்கமங்கலம் உதவி மின் பொறியாளர் மற்றும் ஆகியோர்களே பொறுப்பு என கூறி ராஜ்குமாருக்கு எதிர் தரப்பினர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருளை நஷ்டத்திற்கு இழப்பீடாக 5000 ரூபாயை எதிர் தரப்பினர்கள் சேர்ந்தோ தனித்தோ வழங்க வேண்டும் என்றும் வழக்கு செலவு தொகையாக 5000 ரூபாயை இந்த உத்தர பிறப்பித்த நாளில் இருந்து இரண்டு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் வழங்க தவறும் பட்சத்தில் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் என்று மாவட்ட குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் லட்சுமணன் பாக்கியலட்சுமி அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
AVM Saravanan: சினிமா காதலன்.. ஏவிஎம் சரவணன் தனித்துவம் பெற்றது ஏன்? திரைத்துறையினர் கொண்டாட காரணம்?
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை   - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: தமிழகத்தில் தேர்தல் பணிகள் தொடக்கம், திருப்பரங்குன்றம் வழக்கு, புதின் வருகை - 11 மணி வரை இன்று
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
Embed widget