மேலும் அறிய

பொய் வழக்கு விவகாரம் - திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

காவல்துறையினர் தங்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்று கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூரில் பொய் வழக்கு தொடர்ந்ததாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டவர்களை காவல்துறையினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சாளுவம்பேட்டையில் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி வடுவூர் பகுதியை சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினரும் வலங்கைமான் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி ஒரு சமூகத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் பையில் மறைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய் கேனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின்படி  எதிர்தரப்பை சேர்ந்த பிரேம்குமார், கரண், மணிகண்டன், செந்தில்குமார் கௌதம் ஆகிய ஐந்து பேர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


பொய் வழக்கு விவகாரம் - திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

அதேபோன்று எதிர் சமூகத்தினர் மீதும் 3க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு அமைப்பின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்கள் காவல்துறையினர் தங்கள் தரப்பினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என்று கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே  தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள்  தரையில் அமர்ந்து காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் கூட்டத்தில் கமலேஷ் என்பவர் தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் போராடி மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தரையில் ஊற்றினர்.


பொய் வழக்கு விவகாரம் - திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

அதனைத் தொடர்ந்து 10 பேரை மட்டும் காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதித்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போர்க்களமாக காட்சியளித்தது. மேலும் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget