மேலும் அறிய

திருவாரூர் : ”நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்” : பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.. கேள்விகளை அடுக்கிய விவசாயிகள்.. என்ன நடந்தது?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதி விவசாயிகள் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.

நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை முற்றுகையிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட விவசாயிகள்..

திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது.பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும்காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்தது தண்ணீர் திறந்து விடப்படும்.இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24 ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.

மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 132 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


திருவாரூர் : ”நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்” : பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.. கேள்விகளை அடுக்கிய விவசாயிகள்.. என்ன நடந்தது?

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.குறிப்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரும்பண்ணையூர் புதுக்குடி மஞ்சக்குடி சேங்காலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பெரும்பண்ணையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் வராத காரணத்தினால் கடத்த பத்து நாட்களாக அறுவடை முடிந்து நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருப்பதால் நெல்மணிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்த விவசாயிகள் ஆயத்தமாகி வந்தனர். இந்த தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதி விவசாயிகள் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.


திருவாரூர் : ”நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்” : பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.. கேள்விகளை அடுக்கிய விவசாயிகள்.. என்ன நடந்தது?

200 மூட்டை மட்டுமே தங்களிடம்  நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதற்கு மேல் எடுக்கப்படுவதில்லை எனவும் கூறினர். மேலும் ”பத்து நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கிறோம். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படவில்லை” என பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் அடுக்கடுக்காக அவரிடம் கேட்டனர்.

அவர்களுக்கு பதில் அளித்த ராஜராஜன், ”சரியான ஈரப்பதத்தில் இருந்தால் 800 மூட்டைவரை விவசாயிகளிட்ம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் மேலும் தன்னுடன் பட்டியல் எழுத்தர் ஒருவரை அழைத்து வந்துள்ளதாகவும், அவர் இங்கு பணியாற்றுவார்” என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே இருந்த பட்டியல் எழுத்தர் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டதால், இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் மேலும் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும்  தெரிவித்தார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
Embed widget