மேலும் அறிய

திருவாரூர் : ”நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்” : பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.. கேள்விகளை அடுக்கிய விவசாயிகள்.. என்ன நடந்தது?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதி விவசாயிகள் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.

நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை முற்றுகையிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட விவசாயிகள்..

திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது.பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும்காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்தது தண்ணீர் திறந்து விடப்படும்.இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24 ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.

மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 132 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


திருவாரூர் : ”நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்” : பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.. கேள்விகளை அடுக்கிய விவசாயிகள்.. என்ன நடந்தது?

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.குறிப்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரும்பண்ணையூர் புதுக்குடி மஞ்சக்குடி சேங்காலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பெரும்பண்ணையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் வராத காரணத்தினால் கடத்த பத்து நாட்களாக அறுவடை முடிந்து நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருப்பதால் நெல்மணிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்த விவசாயிகள் ஆயத்தமாகி வந்தனர். இந்த தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதி விவசாயிகள் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.


திருவாரூர் : ”நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்” : பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.. கேள்விகளை அடுக்கிய விவசாயிகள்.. என்ன நடந்தது?

200 மூட்டை மட்டுமே தங்களிடம்  நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதற்கு மேல் எடுக்கப்படுவதில்லை எனவும் கூறினர். மேலும் ”பத்து நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கிறோம். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படவில்லை” என பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் அடுக்கடுக்காக அவரிடம் கேட்டனர்.

அவர்களுக்கு பதில் அளித்த ராஜராஜன், ”சரியான ஈரப்பதத்தில் இருந்தால் 800 மூட்டைவரை விவசாயிகளிட்ம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் மேலும் தன்னுடன் பட்டியல் எழுத்தர் ஒருவரை அழைத்து வந்துள்ளதாகவும், அவர் இங்கு பணியாற்றுவார்” என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே இருந்த பட்டியல் எழுத்தர் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டதால், இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் மேலும் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும்  தெரிவித்தார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget