மேலும் அறிய

திருவாரூர் : ”நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்” : பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.. கேள்விகளை அடுக்கிய விவசாயிகள்.. என்ன நடந்தது?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதி விவசாயிகள் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.

நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரை முற்றுகையிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட விவசாயிகள்..

திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது.பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் தீவிரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும்காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன வசதிக்காக ஜூன் 12ல் மேட்டூர் அணையில் இருந்தது தண்ணீர் திறந்து விடப்படும்.இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24 ல் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.

மேலும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 132 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.


திருவாரூர் : ”நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்” : பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.. கேள்விகளை அடுக்கிய விவசாயிகள்.. என்ன நடந்தது?

தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.குறிப்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பெரும்பண்ணையூர் புதுக்குடி மஞ்சக்குடி சேங்காலிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறுவை சாகுபடி அறுவடை பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பெரும்பண்ணையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தர் வராத காரணத்தினால் கடத்த பத்து நாட்களாக அறுவடை முடிந்து நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து விவசாயிகள் காத்திருப்பதால் நெல்மணிகளை சாலையில் கொட்டி போராட்டம் நடத்த விவசாயிகள் ஆயத்தமாகி வந்தனர். இந்த தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் நேரில் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த பகுதி விவசாயிகள் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர்.


திருவாரூர் : ”நெல் மூட்டைகளுடன் காத்திருக்கிறோம்” : பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரி.. கேள்விகளை அடுக்கிய விவசாயிகள்.. என்ன நடந்தது?

200 மூட்டை மட்டுமே தங்களிடம்  நெல் கொள்முதல் செய்யப்படுவதாகவும், அதற்கு மேல் எடுக்கப்படுவதில்லை எனவும் கூறினர். மேலும் ”பத்து நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து காத்திருக்கிறோம். இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படவில்லை” என பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுகளையும் அடுக்கடுக்காக அவரிடம் கேட்டனர்.

அவர்களுக்கு பதில் அளித்த ராஜராஜன், ”சரியான ஈரப்பதத்தில் இருந்தால் 800 மூட்டைவரை விவசாயிகளிட்ம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்றும் மேலும் தன்னுடன் பட்டியல் எழுத்தர் ஒருவரை அழைத்து வந்துள்ளதாகவும், அவர் இங்கு பணியாற்றுவார்” என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே இருந்த பட்டியல் எழுத்தர் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டதால், இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் மேலும் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும்  தெரிவித்தார். இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தலைப்பு செய்திகள்

அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget