மேலும் அறிய

திருவாரூரில் சாலையில் நடமாடிய குதிரைகள், மாடுகள்; செய்வதறியாது திகைத்த நகராட்சி ஊழியர்கள்..!

எங்களை பிடிக்க முடியாது என கெத்து காட்டிய குதிரைகள்.பிடிபட்ட மாடுகளும் சாலையில் நின்று நகர மறுத்தது. செய்வதறியாது திகைத்த நகராட்சி ஊழியர்கள். 

திருவாரூர் நகரத்திற்குட்பட்ட சாலைகளிலும் அதேபோன்று திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் கங்களாஞ்சேரி வரை இரவு நேரங்களில் மாடுகள் மற்றும் குதிரைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் திருவாரூர் நகராட்சிக்கு தொடர்ந்து புகார் தெரிவித்த வண்ணம் இருந்தனர். இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகள் மற்றும் குதிரைகள் நகராட்சி ஊழியர்கள் மூலம் பிடிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மூன்று நாட்கள் கடக்கும் பட்சத்தில் அந்த கால்நடைகள் பொது ஏலம் விடப்படும் என்றும்  கால்நடைகள் மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு உரிமையாளரே பொறுப்பாவார் என்றும் சாலைகளை சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து தருபவருக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளை கடந்த இரண்டு நாட்களாக பிடித்து நகராட்சி அலுவலகத்திற்குள் பாதுகாத்து வருகின்றனர். 


திருவாரூரில் சாலையில் நடமாடிய குதிரைகள், மாடுகள்; செய்வதறியாது திகைத்த நகராட்சி ஊழியர்கள்..!

அதன் அடிப்படையில் இன்று காலை நகராட்சி ஊழியர்கள் வடக்கு வீதி பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று மாடுகளை பிடித்து கயிறு கட்டி இழுத்து வந்தனர். அந்த மாடுகள் அசையாமல் ரோட்டில் நின்று கொண்டு அடம்பிடித்தன. ஒரு வழியாக மாடுகளை இழுத்துச் சென்று நகராட்சியில் அடைத்தனர். அப்போது நகராட்சி அலுவலகத்திற்கு முன்பே மூன்று குதிரைகள் நடு சாலையில் நின்று கொண்டு வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவாக இருந்தது. இந்த குதிரைகளை கடந்து தான் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் ஒட்டிச் சென்று நகராட்சி அலுவலகத்தில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று கிழக்காவதுகுடி ஊராட்சிக்குட்பட்ட இடங்களிலும் வண்டாம்பாலை ஊராட்சிக்குட்பட்ட இடங்களிலும் மாடுகள் அதிக அளவில் சாலைகளில் படுத்து உறங்குவதும் சுற்றித் திரிவதுமாக இருக்கின்றன. இதனால் அங்கு அதிக விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே அப்பகுதி மக்களும் ஊராட்சி நிர்வாகம் மாடுகளை வாடி அமைத்து கட்டிவைத்து மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து மாடுகள் சாலையில் நடமாடுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். 


திருவாரூரில் சாலையில் நடமாடிய குதிரைகள், மாடுகள்; செய்வதறியாது திகைத்த நகராட்சி ஊழியர்கள்..!

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும்  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றி தெரிவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர். அதுபோன்று ஒரு நாளைக்கு பலமுறை அவசர ஊர்திகள் அந்த சாலை வழியாக திருவாரூர் அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு செல்கின்றது.

இந்த நிலையில் இந்த மாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நீதிமன்றம் வழியாக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுற்றி திரிவதால் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் அந்த சாலையில் இரவு நேரங்களில் உரிய மின்விளக்குகள் இல்லாத காரணத்தினால் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலையில் மாடுகள் நிற்பது தெரியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மாடுகள் மீது மோதி விபத்து ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
ABP Southern Rising Summit 2025 LIVE: முதலமைச்சர் ஸ்டாலின் குரல் இந்தியாவுக்கான ஆலோசனை!
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
Embed widget