மேலும் அறிய

Thiruvarur: கனமழையால் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பாதிப்பு. வயலில் தேங்கியுள்ள மழை நீரை இயந்திரம் மூலம் வெளியேற்றி வரும் விவசாயிகள்.

திருவாரூர் மாவட்டத்தில் 40,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். கோடைக்கால பயிராகவும் பணப்பயிராகவும் விளங்கும் பருத்தியை பயிரிடுவதில் கடந்த சில வருடங்களாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முழுவதும் கனமழை என்பது கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பருத்தி வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல், கோட்டூர், கமலாபுரம், நொச்சிகுடி, கருப்பூர், புனவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

Thiruvarur: கனமழையால் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில்  பருத்தி சாகுபடி பாதிப்பு - விவசாயிகள் கவலை
 
இந்த நிலையில் பருத்தி பயிரிட்டு 60 நாட்கள் ஆன நிலையில் தற்போது பூ வைத்து காய் வைக்கும் பருவத்தில் பருத்திச் செடிகள் உள்ளன. மேலும் பருத்தி கோடை கால பயிர் என்பதால் 30 நாட்களில் ஒருமுறை தண்ணீரும் 90 நாளில் ஒரு முறை தண்ணீர் வைத்தாலே பருத்தி சாகுபடிக்கு போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதாலும் இப்பகுதிகளில் உரிய வடிகால் வசதி இல்லாத காரணத்தினாலும் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பருத்தி பயிர்கள் அழுகி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி வயல்களில் மழை நீர் தேங்கி பருத்திச் செடிகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கமலாபுரம் புனவாசல் நொச்சிக்குடி கருப்பூர் பான்ற பகுதிகளில் வடிகால் வசதி முறையாக இல்லாத காரணத்தினால் விவசாயிகள் பருத்தி வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை நீரேற்றும் இயந்திரம் மூலம் இறைத்து வருகின்றனர்.மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள காரணத்தினால் பருத்தி பயிர்கள் முற்றிலுமாக பாதிக்கக்கூடிய சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விவசாயிகள் 60 நாட்கள் இந்த பருத்தி பயிரினை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழையின் காரணமாக முழுவதுமாக பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை நிலவுவதால் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget