மேலும் அறிய

9 ஆண்டாக கட்டப்படாத ரயில்வே மேம்பாலங்கள் - போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் 4 மாவட்ட மக்கள்

ஒன்பது ஆண்டுகளாக கட்டப்படாத ரயில்வே மேம்பாலங்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் 4 மாவட்ட மக்கள்.

நாகை-தஞ்சை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகை-தஞ்சை இடையே முக்கிய பகுதியாக இருப்பது திருவாரூர் மாவட்டம் உள்ளது. மேலும் இந்த சாலையில் திருவாரூர் மாவட்டத்தில் தான் 4 ரயில்வே கேட்டுகள் உள்ளன. இதேபோல் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் பேரளத்தில் ஒரு ரெயில்வே கேட்டும், திருவாரூர்-மன்னார்குடி பாதையில் சிங்களாஞ்சேரியில் ஒரு ரயில்வே கேட்டும் அமைந்துள்ளது. இந்த 6 ரெயில்வே கேட்டுகள் அவ்வப்போது மூடப்படும் நிலையில் போக்குவரத்து என்பது ஸ்தம்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில அமைந்துள்ள நீடாமங்கலம் ரெயில்வே கேட் என்பது நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இந்த பாதையில் மன்னார்குடியில் இருந்து சென்னை, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் ரெயில்கள் நீடாமங்கலம் ரெயில்வே கேட்டில் ரெயில் என்ஜின் திசை மாற்றப்பட்டு இயக்கப்படும் சுழ்நிலை நிலவுகிறது. மேலும் சரக்கு ரெயில் போக்குவரத்து, திருச்சி, எர்ணாகுளம் போன்ற பகுதிக்கு செல்லும் ரெயில்களால் ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் இந்த ரெயில்வே கேட் அடிக்கடி அரை மணி நேரத்திற்கு மேலாக மூடப்படும்.


9 ஆண்டாக கட்டப்படாத ரயில்வே மேம்பாலங்கள் -  போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் 4 மாவட்ட மக்கள்

ரெயில்வே கேட்டுகளில் சிக்கும் வாகனங்கள், அதில் பயணம் செய்பவர்கள் சொல்ல முடியதா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த வழிபாதை வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற முக்கிய ஸ்தலங்களுக்கும் செல்வதால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து என்பது அதிகமாக இருக்கும்.  அவசர ஆபத்து காலங்களில் எந்த திசையில் செல்ல முடியாமல் போக்குவரத்தில் சிக்கும் அவலநிலை இருந்து வருகிறது. இந்த சுழ்நிலையில் கடந்த 2013 ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் ரெயில்வே நிலையம் அருகில், மயிலாடுதுறை சாலையில் பேரளம் ரெயில் நிலையம் அருகில், திருவாரூர் மன்னார்குடி சாலையில் சிங்களாஞ்சேரி ரெயில் கேட் அருகில் என 3 மேம்பாலம் கட்டப்படும் என அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் 3 ரெயில்வே மேம்பாலமும் கட்டப்படாமல் இருந்து வருகிறது.


9 ஆண்டாக கட்டப்படாத ரயில்வே மேம்பாலங்கள் -  போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் 4 மாவட்ட மக்கள்

குறிப்பாக காரைக்கால்-தஞ்சை வழி பிரதான ரெயில் பாதையாக இருப்பதால் பயணிகள் ரெயில், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரெயில் மற்றும் பருவ காலத்தில் பொது விநியோக திட்டத்திற்காக நெல், அரிசி ஏற்றி செல்லும் சரக்கு என ரெயில் போக்குவரத்து மிகுந்த பாதையாக இருந்து வருகிறது. இதனால் கால நேரத்தை கணக்கிட முடியாத நிலையில் சரக்கு ரெயில் போக்குவரத்து இருப்பதால் ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி அடைக்கப்படுவதால் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருவாரூர்-மன்னார்குடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2013 ஆண்டு ரூ.27 கோடி 6 லட்சம் மதிப்பில் மேம்பாலம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து ரெயில்வே நிர்வாகம் உடனியாக தண்டவாள பாதையில் பாலம் கட்டும் பணியினை தொடங்கி நிறைவு செய்தது. இந்த பாலம் கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆன நிலையில் இணைப்பு சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணியினை முடிக்கப்படவில்லை. இதன் காரணமாக ரெயில்வே துறையால் கட்டப்பட்ட பாலம் அந்தரத்தில் தொங்கும் நிலையில் இருந்து வருகிறது. இதேபோல் திருவாரூர்-மயிலாடுதுறை மாவட்டத்தை இணைக்கும் பேரளம் ரெயில் மேம்பாலம் கட்டும் பணிகள் முற்றிலும் நடைபெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக மிக முக்கியமான நீடாமங்கலம் ரெயில்வே மேம்பாலம் என்பது பிரதான கடைவீதி சாலையில் அமைந்துள்ளதால் நிலம் கையகப்படும் பணிகளில் பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால் சாலை மார்க்கமாக பயணம் செய்யும் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய டெல்டா மாவட்ட மக்கள் நாள்தோறும் ரெயில்வே கேட்டுகள் மூடப்படுவதால் அவதியடைந்து வருகின்றனர். எனவே திருவாரூர் மாவட்டத்தில் பிரதான 3 ரெயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகளில் உள்ள பிரச்சனைகளை கலைந்து, மேம்பாலம் விரைந்து அமைத்தால் தான் திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாதுறை டெல்டா மாவட்டத்திற்கு விடியல் பிறக்கும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget