மேலும் அறிய

திருவாரூர்: 5000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் புகையான், இலை சுருட்டல் நோய்களினால் பாதிப்பு - விவசாயிகள் கவலை 

நெற்பயிர்களை புகையான் மற்றும் இலை சுருட்டல் நோய்கள் கடுமையாக தாக்கி வருகின்றன.இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் பதர்களாக மாறிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவ மழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போக சாகுபடி என்பது ஒருபோக சாகுபடியாக மாறியது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி என்பது நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிற் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


திருவாரூர்: 5000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் புகையான், இலை சுருட்டல் நோய்களினால் பாதிப்பு - விவசாயிகள் கவலை 

இந்த நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர் அறுவடை என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த 15 நாட்களாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக கனமழை பெய்த காரணத்தினால் மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் பாதிப்படைந்தன. சென்ற வருடமும் இந்த வருடமும் குறுவை நெற்பயிர் சாகுபடிக்கு பயிர் காப்பீடு அரசு அறிவிக்காத காரணத்தினால் விவசாயிகள் இதற்கான இழப்பீடு பெற முடியாமல் உள்ளனர். இந்த நிலையில் தற்போது கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட  புழுதிக்குடி வல்லவராயன் கட்டளை, விக்கிரபாண்டியம்,கோட்டூர், சிதம்பர கோட்டகம் சிராங்குடி சபாபதிபுரம் இருள் நீக்கி போன்ற பகுதிகளில்  குறுவை நெற்பயிர்கள் பால் கட்டும் பருவத்தில் இருக்கின்றன.தற்போது இந்த நெற்பயிர்களை புகையான் மற்றும் இலை சுருட்டல் நோய்கள் கடுமையாக தாக்கி வருகின்றன.இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் பதர்களாக மாறிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 


திருவாரூர்: 5000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் புகையான், இலை சுருட்டல் நோய்களினால் பாதிப்பு - விவசாயிகள் கவலை 

ஏற்கனவே கனமழை காரணமாக குறுவை நெற்பயிர் சாகுபடி பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடை விவசாயிகள் தமிழக அரசிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய நிலையில் தற்போது இந்த புகையான் மற்றும் இலை சுருட்டல் நோய் காரணமாக அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு பதர்களாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட வேளாண்துறை உரிய நடவடிக்கை எடுத்து இந்த நோய் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை காக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget