மேலும் அறிய

திருவாரூர்: 5000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் புகையான், இலை சுருட்டல் நோய்களினால் பாதிப்பு - விவசாயிகள் கவலை 

நெற்பயிர்களை புகையான் மற்றும் இலை சுருட்டல் நோய்கள் கடுமையாக தாக்கி வருகின்றன.இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் பதர்களாக மாறிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் பருவ மழை பொய்த்து போனதன் காரணத்தினாலும் மூன்று போக சாகுபடி என்பது ஒருபோக சாகுபடியாக மாறியது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணத்தினால் மீண்டும் டெல்டா மாவட்டங்களில் மூன்று போகம் சாகுபடி என்பது நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் இந்த வருடம் 75 ஆண்டுகளுக்கு பிறகு மே 24ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிற் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


திருவாரூர்: 5000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் புகையான், இலை சுருட்டல் நோய்களினால் பாதிப்பு - விவசாயிகள் கவலை 

இந்த நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர் அறுவடை என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.கடந்த 15 நாட்களாக வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக கனமழை பெய்த காரணத்தினால் மாவட்டம் முழுவதும் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் பாதிப்படைந்தன. சென்ற வருடமும் இந்த வருடமும் குறுவை நெற்பயிர் சாகுபடிக்கு பயிர் காப்பீடு அரசு அறிவிக்காத காரணத்தினால் விவசாயிகள் இதற்கான இழப்பீடு பெற முடியாமல் உள்ளனர். இந்த நிலையில் தற்போது கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட  புழுதிக்குடி வல்லவராயன் கட்டளை, விக்கிரபாண்டியம்,கோட்டூர், சிதம்பர கோட்டகம் சிராங்குடி சபாபதிபுரம் இருள் நீக்கி போன்ற பகுதிகளில்  குறுவை நெற்பயிர்கள் பால் கட்டும் பருவத்தில் இருக்கின்றன.தற்போது இந்த நெற்பயிர்களை புகையான் மற்றும் இலை சுருட்டல் நோய்கள் கடுமையாக தாக்கி வருகின்றன.இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் பதர்களாக மாறிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 


திருவாரூர்: 5000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் புகையான், இலை சுருட்டல் நோய்களினால் பாதிப்பு - விவசாயிகள் கவலை 

ஏற்கனவே கனமழை காரணமாக குறுவை நெற்பயிர் சாகுபடி பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடை விவசாயிகள் தமிழக அரசிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய நிலையில் தற்போது இந்த புகையான் மற்றும் இலை சுருட்டல் நோய் காரணமாக அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு பதர்களாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே மாவட்ட வேளாண்துறை உரிய நடவடிக்கை எடுத்து இந்த நோய் தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை காக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

ஆன்லைனில் போதை மாத்திரைகள் வாங்கி விற்பனை... 4 பேரை தட்டித் தூக்கிய போலீசார்: தஞ்சை மக்கள் மத்தியில் அதிர்ச்சி
ஆன்லைனில் போதை மாத்திரைகள் வாங்கி விற்பனை... 4 பேரை தட்டித் தூக்கிய போலீசார்: தஞ்சை மக்கள் மத்தியில் அதிர்ச்சி
நேபாளம் வெள்ளப்பெருக்கில் மாயமானவர்களின் உறவினர்கள் 23 பேரிடம் இருந்து டிஎன்ஏவுக்காக ரத்த மாதிரி சேகரிப்பு
நேபாளம் வெள்ளப்பெருக்கில் மாயமானவர்களின் உறவினர்கள் 23 பேரிடம் இருந்து டிஎன்ஏவுக்காக ரத்த மாதிரி சேகரிப்பு
டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலி... கும்பகோணத்தில் தனியார் மதுபானக்கடை முன்பு குவிந்த மதுப்பிரியர்கள்
டாஸ்மாக் கடைகள் மூடல் எதிரொலி... கும்பகோணத்தில் தனியார் மதுபானக்கடை முன்பு குவிந்த மதுப்பிரியர்கள்
அட்டைப் பிள்ளையாரால் நேர்ந்த பேரழிவு! பட்டுக்கோட்டையில் கதறும் தொழிலாளர்கள்!
அட்டைப் பிள்ளையாரால் நேர்ந்த பேரழிவு! பட்டுக்கோட்டையில் கதறும் தொழிலாளர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்த குற்றவாளி வெட்டிக்கொலை.! இது தான் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை - விளாசிய உதயநிதி
தவெகவில் இணைந்த குற்றவாளி வெட்டிக்கொலை.! இது தான் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை - விளாசிய உதயநிதி
Thirumavalavan : பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
பிரதமர் வேட்பாளர் விஜய்.? திருமாவளவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை – தவெகவினர் அதிர்ச்சி!
Chennai New Airport : பரந்தூர் அவுட்… அடுத்த ஏர்போர்ட் எங்கே.? 2 இடங்களை டிக் செய்த சிஎம் விஜய்- எங்கெங்கே தெரியுமா.?
பரந்தூர் அவுட்… அடுத்த ஏர்போர்ட் எங்கே.? 2 இடங்களை டிக் செய்த சிஎம் விஜய்- எங்கெங்கே தெரியுமா.?
Chennai Airport: புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?
புறக்கணிக்கப்படும் திருவள்ளூர்..! புதிய ஏர்போர்ட்டால் ஜாக்பாட் அடிக்குமா? கும்மிடிப்பூண்டிக்கு வருமா?
Kia Hybrid Cars: மைலேஜை ஏத்தி, செலவை குறைக்கிறோம்..! டக்கரா 5 ஹைப்ரிட்கள் - கியாவின் பட்ஜெட் டூ 7 சீட்டர் வரை
மைலேஜை ஏத்தி, செலவை குறைக்கிறோம்..! டக்கரா 5 ஹைப்ரிட்கள் - கியாவின் பட்ஜெட் டூ 7 சீட்டர் வரை
Nirmal Kumar: ”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
”உதயநிதிக்கு ஒன்னுமே தெரியாது, ஊரை விட்டே ஓடியாச்சு” 70 வயது? திமுகவை தாக்கிய நிர்மல்குமார்
Diwali Train Reservation : தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.! ரயிலில் முன்பதிவு இன்று ஓபன்- ஈசியா டிக்கெட் எடுப்பது எப்படி.?
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.! ரயிலில் முன்பதிவு இன்று ஓபன்- ஈசியா டிக்கெட் எடுப்பது எப்படி.?
School Exam Holidays : மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
மாணவர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்த மாஸ் நியூஸ் - எப்போது முதல் லீவு.?
Embed widget