![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருவாரூரில் 4759 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
பார்வையற்றோருக்கான கைக்கடிகாரம் மற்றும் பிரெய்லி மூலம் வாசிக்கும் கருவி ஊன்றுகோல், இலவச தையல் இயந்திரம் உட்பட மொத்தம் 18 வகையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
![திருவாரூரில் 4759 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் thiruvarur disabled person 3 crose 81 laks thinks issue திருவாரூரில் 4759 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3 கோடியே 81 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/a7135e4f356b833e8912c8c68f9c2bc51660811521450185_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 4759 மாற்று திறனாளிகளுக்கு 3 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் விவசாயிகள், பெண்கள், மாணவ-மாணவிகள் என பலரும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அவர்களின் மனதில் தன்னம்பிக்கையை வளரச் செய்து சமுதாயத்தில் சம வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகின்ற வகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு திருநங்கை என்று பெயர் சூட்டியது போன்று ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று பெயர் சூட்டப்பட்டது. அதன் அடிப்படையில் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மனவளர்ச்சி குன்றியோர் கடும் ஊனத்தால் பாதிக்கப்பட்டோர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் பார்க்கின்சன் நோய் தண்டுவட மரபு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புகுள்ளான மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 4709 பயனாளிகளுக்கு மாதம் தலா 1500 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமின்றி சிறுகுறு நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து தங்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட மாற்று திறன் குழந்தைகளுக்கு மதியம் ஊட்டச்சத்து சத்துணவு வழங்கும் திட்டம் மற்றும் ஆறு வயது வரை உள்ள மனவளர்ச்சி குன்றியோர்க்கான மற்றும் காதுகேளாதவர்களுக்கான ஆரம்பகால பயிற்சி மையமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, கருப்பு கண்ணாடி, பார்வையற்றோருக்கான கைக்கடிகாரம் மற்றும் பிரெய்லி மூலம் வாசிக்கும் கருவி ஊன்றுகோல், செயற்கை கை, கால்கள், காதொலி கருவி, இலவச தையல் இயந்திரம் உட்பட மொத்தம் 18 வகையான உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் மானியம் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டமும் 15 நாட்களுக்கு ஒரு முறை கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலவாரியமும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் இந்த துறையின் மூலம் திருவாரூர் மாவட்டத்தில் 4759 பயனாளிகளுக்கு 3 கோடியே 81 லட்சத்து 7665 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தமிழக முதல்வருக்கு மாற்றுத்திறனாளி பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)