மேலும் அறிய

காலக்கெடு முடிவதற்குள் பணத்தை பிடித்தம் செய்த வங்கி; கல்விக் கடன் விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு..!

வாராக் கடனாக அறிவித்த பின்பு தான் பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறை ஆகும்.

திருவாரூர் மாவட்டம் ஈ.வி.எஸ் நகர் பகுதியில் வசித்து வரும் 53 வயதான பாலாஜி என்பவர் ராணுவப் பணியிலிருந்து ஓய்வுபெற்று அதன் மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறார். இவர் தனது ஓய்வூதியத்தை திருவாரூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியான பேங்க் ஆப் பரோடாவில் இருந்து மாதந்தோறும் பெற்று வருகிறார். இந்த நிலையில் பாலாஜியின் மகள் ஆஷிகா தனது பொறியியல் படிப்பிற்காக இந்த கிளையில் கடன் பெற்றுள்ளார். 2017-18 ஆம் ஆண்டு ஆஷிகா பொறியியல் படிப்பை முடித்து தற்சமயம் வேலைக்காக காத்திருக்கிறார். இந்தநிலையில் கல்விக் கடன் செலுத்த அளிக்கப்படும் ஒரு வருட காலக் கெடு முடிவதற்குள் பாலாஜியின் வங்கி கணக்கில் இருந்து அவரது மகள் ஆஷிகா கல்விக் கடனுக்காக எந்தவித முன்னறிவிப்புமின்றி 23 ஆயிரத்து 4 ரூபாயை பரோடா வங்கி பிடித்தம் செய்து உள்ளது. இதுகுறித்து வங்கியில் பாலாஜி கேட்டதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


காலக்கெடு முடிவதற்குள் பணத்தை பிடித்தம் செய்த வங்கி; கல்விக் கடன் விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு..!

மேலும் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆஷிகாவின் கல்விக் கடனை வாராக்கடன் என பேங்க் ஆப் பரோடா வங்கி அறிவித்துள்ளது. வாராக் கடனாக அறிவித்த பின்பு தான் பணம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறை என்று கூறப்படுகிறது. ஆனால் வங்கி தரப்போ ஆசிகாவின் தந்தை கணக்கில் இருந்து பணத்தை பிடித்த பின்பு ஆஷிகாவின் கல்வி கடனை வாராக் கடனாக அறிவித்துள்ளது. இதனையடுத்து பாலாஜி திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி பாலாஜிக்கு வங்கி தரப்பு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூபாய் 5 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவரது வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 23 ஆயிரத்து 4 ரூபாயை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்த நாளிலிருந்து 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும், மேலும் அவரது வழக்கு செலவுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அதிரடி தீர்ப்பு அளித்து உத்தரவிட்டார்.


காலக்கெடு முடிவதற்குள் பணத்தை பிடித்தம் செய்த வங்கி; கல்விக் கடன் விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு..!

இந்த இழப்பீடு தொகை மற்றும் வங்கி கணக்கு கண்டுபிடிக்கப்பட்ட தொகை ஆகியவற்றை  6 வார காலத்திற்குள் பாலாஜிக்கு பாங்க் ஆப் பரோடா வங்கி  வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த தொகையினை வங்கி 6 வார காலத்திற்குள் பாலாஜிக்கு வழங்க தவறும் பட்சத்தில் அந்த நாளிலிருந்து 6 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Bangladesh Protest Violence: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்கள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்கள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
Embed widget