மேலும் அறிய

பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

பிரின்டர் ஸ்கேனர் மாடல் 2014 என்கிற ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றினை 46,500 ரூபாய்க்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கி உள்ளார்.

பழுதடைந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை மாற்றி கொடுக்காத  நிறுவனம் வாடிக்கையாளருக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் முருகானந்தம்.  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ரிக்கோ மிஷின் காப்பியர் பிரின்டர் ஸ்கேனர் மாடல் 2014 என்கிற ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றினை 46,500 ரூபாய்க்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கி உள்ளார். இந்த இயந்திரத்தை டெலிவரி செய்வதற்கு ரூபாய் ஆயிரம் நிறுவனம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்திற்கு இரண்டு வருடம் உத்தரவாதம் இருந்த நிலையில் நான்கு மாதங்களில் இயந்திரம் பழுதாகி உள்ளது. இதனையடுத்து  பழுதான இயந்திரத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி எடுத்துச் சென்ற சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தினர் ஒரு வாரத்தில் சீர்செய்து கொடுத்து விடுவதாகவும் இல்லையென்றால் புதிய இயந்திரம் வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் அவ்வாறு அந்த நிறுவனம் நடந்து கொள்ளாத காரணத்தினால் முருகானந்தம் கடந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். 


பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

இந்த வழக்கில் இன்று வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி முருகானந்தத்திற்கு ஜெராக்ஸ் இயந்திரம் வாங்கிய தொகையான 46 ஆயிரத்து 500 மற்றும் டெலிவரி கட்டணம் ரூபாய் 1000 சேர்த்து 47 ஆயிரத்து 500 ரூபாய் 9 சதவீத வருட வட்டியுடன் கொடுக்க வேண்டும் எனவும் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி வரை அவருக்கு ஏற்பட்ட வருமான இழப்பிற்கு நாளொன்றுக்கு ரூ. 500 வீதம் 60 ஆயிரம் ரூபாய் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் மேலும்  மன உளைச்சல் மற்றும் பொருள் கஷ்ட நஷ்டத்திற்கு இழப்பீடு தொகையாக இரண்டு லட்சம் ரூபாயும் சேவை குறைபாட்டினால் தண்டனைக்குரிய சேதங்கள் ஏற்படுத்தியதற்கு கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் வழக்கு செலவிற்கு பத்தாயிரம் ரூபாயும் என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை 6 வார காலத்திற்குள்  வழங்க வேண்டும் என சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் நிறுவன மேலாளர் மற்றும் சர்வீஸ் இஞ்சினியர் சரவணன் ஆகியோருக்கு உத்தரவிட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

இந்த தொகையினை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் 6 சதவீத வருட வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 


பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சீதக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் கூறும்பொழுது, '' எங்கள் பகுதியில் பள்ளிக்கூடம், கூட்டுறவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு செல்பவர்கள் ஜெராக்ஸ் எடுப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்வதையடுத்து நான் புதியதாக ஜெராக்ஸ் மெஷின் வாங்கி தொழிலில் ஈடுபட்டு வந்தேன். ஜெராக்ஸ் மிஷின் வாங்கி ஆறு மாதங்களில் அது பழுதடைந்த நிலையில் பலமுறை மெஷின் வாங்கிய நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பல நாட்கள் கழித்து ஜெராக்ஸ் மிஷினை சரி செய்து தருவதாக எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் அதை தரவும் இல்லை அது குறித்து பலமுறை கேட்டும் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தனர், அதனையடுத்து தான் வழக்கறிஞர் மூலமாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினேன். தற்பொழுது எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இனிவரும் காலங்களில் நுகர்வோரை யாரும் ஏமாற்ற கூடாது என்பதற்கு இது நல்ல தீர்ப்பாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் பாதிக்கப்பட்ட முருகானந்தம் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
"அதிமுகவின் மடியில் உள்ள கனத்தை வேறு ஒருவர் பறிக்க முயற்சி" பேரவையில் போட்டுத்தாக்கிய தங்கம் தென்னரசு...
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
TN Govt School Admission: 1 லட்சத்தைக் கடந்த அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; அசத்தும் சிவகங்கை- கடைசி இடத்தில் தேனி- இவ்வளவுதானா?
Embed widget