மேலும் அறிய

பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

பிரின்டர் ஸ்கேனர் மாடல் 2014 என்கிற ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றினை 46,500 ரூபாய்க்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கி உள்ளார்.

பழுதடைந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை மாற்றி கொடுக்காத  நிறுவனம் வாடிக்கையாளருக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் முருகானந்தம்.  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ரிக்கோ மிஷின் காப்பியர் பிரின்டர் ஸ்கேனர் மாடல் 2014 என்கிற ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றினை 46,500 ரூபாய்க்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கி உள்ளார். இந்த இயந்திரத்தை டெலிவரி செய்வதற்கு ரூபாய் ஆயிரம் நிறுவனம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்திற்கு இரண்டு வருடம் உத்தரவாதம் இருந்த நிலையில் நான்கு மாதங்களில் இயந்திரம் பழுதாகி உள்ளது. இதனையடுத்து  பழுதான இயந்திரத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி எடுத்துச் சென்ற சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தினர் ஒரு வாரத்தில் சீர்செய்து கொடுத்து விடுவதாகவும் இல்லையென்றால் புதிய இயந்திரம் வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் அவ்வாறு அந்த நிறுவனம் நடந்து கொள்ளாத காரணத்தினால் முருகானந்தம் கடந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். 


பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

இந்த வழக்கில் இன்று வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி முருகானந்தத்திற்கு ஜெராக்ஸ் இயந்திரம் வாங்கிய தொகையான 46 ஆயிரத்து 500 மற்றும் டெலிவரி கட்டணம் ரூபாய் 1000 சேர்த்து 47 ஆயிரத்து 500 ரூபாய் 9 சதவீத வருட வட்டியுடன் கொடுக்க வேண்டும் எனவும் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி வரை அவருக்கு ஏற்பட்ட வருமான இழப்பிற்கு நாளொன்றுக்கு ரூ. 500 வீதம் 60 ஆயிரம் ரூபாய் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் மேலும்  மன உளைச்சல் மற்றும் பொருள் கஷ்ட நஷ்டத்திற்கு இழப்பீடு தொகையாக இரண்டு லட்சம் ரூபாயும் சேவை குறைபாட்டினால் தண்டனைக்குரிய சேதங்கள் ஏற்படுத்தியதற்கு கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் வழக்கு செலவிற்கு பத்தாயிரம் ரூபாயும் என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை 6 வார காலத்திற்குள்  வழங்க வேண்டும் என சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் நிறுவன மேலாளர் மற்றும் சர்வீஸ் இஞ்சினியர் சரவணன் ஆகியோருக்கு உத்தரவிட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

இந்த தொகையினை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் 6 சதவீத வருட வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 


பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சீதக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் கூறும்பொழுது, '' எங்கள் பகுதியில் பள்ளிக்கூடம், கூட்டுறவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு செல்பவர்கள் ஜெராக்ஸ் எடுப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்வதையடுத்து நான் புதியதாக ஜெராக்ஸ் மெஷின் வாங்கி தொழிலில் ஈடுபட்டு வந்தேன். ஜெராக்ஸ் மிஷின் வாங்கி ஆறு மாதங்களில் அது பழுதடைந்த நிலையில் பலமுறை மெஷின் வாங்கிய நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பல நாட்கள் கழித்து ஜெராக்ஸ் மிஷினை சரி செய்து தருவதாக எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் அதை தரவும் இல்லை அது குறித்து பலமுறை கேட்டும் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தனர், அதனையடுத்து தான் வழக்கறிஞர் மூலமாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினேன். தற்பொழுது எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இனிவரும் காலங்களில் நுகர்வோரை யாரும் ஏமாற்ற கூடாது என்பதற்கு இது நல்ல தீர்ப்பாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் பாதிக்கப்பட்ட முருகானந்தம் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget