மேலும் அறிய

பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

பிரின்டர் ஸ்கேனர் மாடல் 2014 என்கிற ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றினை 46,500 ரூபாய்க்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கி உள்ளார்.

பழுதடைந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை மாற்றி கொடுக்காத  நிறுவனம் வாடிக்கையாளருக்கு 3 லட்சத்து 70 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

திருவாரூர் மாவட்டம் சீதக்கமங்கலம் மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் முருகானந்தம்.  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி ரிக்கோ மிஷின் காப்பியர் பிரின்டர் ஸ்கேனர் மாடல் 2014 என்கிற ஜெராக்ஸ் இயந்திரம் ஒன்றினை 46,500 ரூபாய்க்கு கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் என்கிற நிறுவனத்திடமிருந்து வாங்கி உள்ளார். இந்த இயந்திரத்தை டெலிவரி செய்வதற்கு ரூபாய் ஆயிரம் நிறுவனம் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்திற்கு இரண்டு வருடம் உத்தரவாதம் இருந்த நிலையில் நான்கு மாதங்களில் இயந்திரம் பழுதாகி உள்ளது. இதனையடுத்து  பழுதான இயந்திரத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி எடுத்துச் சென்ற சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தினர் ஒரு வாரத்தில் சீர்செய்து கொடுத்து விடுவதாகவும் இல்லையென்றால் புதிய இயந்திரம் வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் அவ்வாறு அந்த நிறுவனம் நடந்து கொள்ளாத காரணத்தினால் முருகானந்தம் கடந்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். 


பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

இந்த வழக்கில் இன்று வழங்கிய திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி முருகானந்தத்திற்கு ஜெராக்ஸ் இயந்திரம் வாங்கிய தொகையான 46 ஆயிரத்து 500 மற்றும் டெலிவரி கட்டணம் ரூபாய் 1000 சேர்த்து 47 ஆயிரத்து 500 ரூபாய் 9 சதவீத வருட வட்டியுடன் கொடுக்க வேண்டும் எனவும் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி வரை அவருக்கு ஏற்பட்ட வருமான இழப்பிற்கு நாளொன்றுக்கு ரூ. 500 வீதம் 60 ஆயிரம் ரூபாய் 9 சதவீத வருட வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் மேலும்  மன உளைச்சல் மற்றும் பொருள் கஷ்ட நஷ்டத்திற்கு இழப்பீடு தொகையாக இரண்டு லட்சம் ரூபாயும் சேவை குறைபாட்டினால் தண்டனைக்குரிய சேதங்கள் ஏற்படுத்தியதற்கு கூடுதலாக ஒரு லட்சம் ரூபாயும் வழக்கு செலவிற்கு பத்தாயிரம் ரூபாயும் என மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை 6 வார காலத்திற்குள்  வழங்க வேண்டும் என சான்யோ ஆபீஸ் ஆட்டோமேஷன் நிறுவன மேலாளர் மற்றும் சர்வீஸ் இஞ்சினியர் சரவணன் ஆகியோருக்கு உத்தரவிட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

இந்த தொகையினை உரிய காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் 6 சதவீத வருட வட்டியுடன் செலுத்த வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 


பழுதடைந்த பிரிண்டரை மாற்றிக்கொடுக்காத நிறுவனம்! ரூ.3.70 லட்சம் இழப்பீடு உத்தரவிட்ட கோர்ட்!

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சீதக்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் கூறும்பொழுது, '' எங்கள் பகுதியில் பள்ளிக்கூடம், கூட்டுறவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு செல்பவர்கள் ஜெராக்ஸ் எடுப்பதற்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்வதையடுத்து நான் புதியதாக ஜெராக்ஸ் மெஷின் வாங்கி தொழிலில் ஈடுபட்டு வந்தேன். ஜெராக்ஸ் மிஷின் வாங்கி ஆறு மாதங்களில் அது பழுதடைந்த நிலையில் பலமுறை மெஷின் வாங்கிய நிறுவனத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பல நாட்கள் கழித்து ஜெராக்ஸ் மிஷினை சரி செய்து தருவதாக எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் அதை தரவும் இல்லை அது குறித்து பலமுறை கேட்டும் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தனர், அதனையடுத்து தான் வழக்கறிஞர் மூலமாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினேன். தற்பொழுது எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இனிவரும் காலங்களில் நுகர்வோரை யாரும் ஏமாற்ற கூடாது என்பதற்கு இது நல்ல தீர்ப்பாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் பாதிக்கப்பட்ட முருகானந்தம் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி – கொல்லத்திற்கு தஞ்சை வழியாக ரயில் இயக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்
புதுச்சேரி – கொல்லத்திற்கு தஞ்சை வழியாக ரயில் இயக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்
ஸ்பீட் ரீல்ஸ் செய்து கிராண்ட்மாஸ்டர் சாதனை படைத்த தஞ்சை அஸ்வினி ஆனந்த்
ஸ்பீட் ரீல்ஸ் செய்து கிராண்ட்மாஸ்டர் சாதனை படைத்த தஞ்சை அஸ்வினி ஆனந்த்
புனித நீராட முடியாமல் தவிக்கிறோம்... பக்தர்களின் குற்றச்சாட்டுக்கு அறநிலையத்துறை விளக்கம்
புனித நீராட முடியாமல் தவிக்கிறோம்... பக்தர்களின் குற்றச்சாட்டுக்கு அறநிலையத்துறை விளக்கம்
அருமையான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை... பயணிகள் மகிழ்ச்சி
அருமையான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை... பயணிகள் மகிழ்ச்சி
ABP Premium

வீடியோ

Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho
Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்
PTR Palanivel Thiagarajan |”ஸ்டாலின் வாய்ப்பளித்தால்” விருப்ப மனு கொடுத்த PTR! தேர்தலில் போட்டி ஏன்?
Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue
DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
Udhayanidhi: மு.க.ஸ்டாலினிடம் 40 சீட் கேட்ட உதயநிதி..! ஓகே சொல்வாரா அப்பா?
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
DMDK: எந்த தொகுதியில நிக்கலாம்? பட்டியலை பட்டைத் தீட்டும் தேமுதிக - உத்தரவு போட்ட பிரேமலதா!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
விஜய்க்கு ஆதரவு: பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சி அதிரடி முடிவு! தேர்தல் களம் பரபரப்பு!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
TN Voter List: போன் நம்பர் போதும்.. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? 3 வழியில் உடனே சரிபார்க்கலாம்!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
மாணவர்களிடையே வளர்ந்து நிற்கும் சாதி வெறிக்கு யார் பொறுப்பு? சாத்தான்குளம் சம்பவத்தில் ஈபிஎஸ் கேள்வி!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? பணம் எடுக்கும் எளிய வழிமுறைகள்!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
Isha: பழங்குடியின, கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
UPSC: யுபிஎஸ்சி CAPF -ல் 349 பணியிடங்கள்! உடனே விண்ணப்பிங்க- தகுதி, வழிமுறை.. முழு விவரம் இதோ!
Embed widget